Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் பொருள் வீடுகளுக்கே சென்று விநியோகம்.. முதல்வருக்கு ரேஷன் கடை ஊழியர்கள் வைத்த கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாயுமானவர் திட்ட விநியோகத்துக்கு ஒவ்வொரு மாதமும் 2-வது சனி, ஞாயிறு மற்றும் அடுத்து வரும் திங்கட்கிழமையை நிரந்தர நாட்களாக செயல்படுத்தி அறிவிப்பு வெளியிட வேண்டும். பிரதிநிதி மூலம் பொருட்கள் வழங்குவதற்கும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது, தாயுமானவர் திட்ட விநியோக நாட்களில் 'பிராக்ஸி' முறையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரம் ரேஷன் கடை ஊழியர்கள் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அதன்படி, பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான வாடகை (வண்டி வாடகை) மற்றும் ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி ஆகியவை முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால் பணியாளர்களே தங்கள் கைக்காசை செலவிடும் நிலை ஏற்படுகிறது. இந்தப் பணிக்காக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை பணியாளர்களுக்கு இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.

Ration Shop ration card

4G சர்வர் மற்றும் POS Machines அடிக்கடி பழுதாவதால், கைரேகை மற்றும் கருவிழி சரிபார்ப்பில் பெரும் தாமதம் ஏற்படுகிறது. பணியாளர்கள் தங்கள் சொந்த செல்போன் டேட்டாவைப் பயன்படுத்தி வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்தத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றார்கள்.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறுகையில், "தாயுமானவர் திட்ட விநியோகத்துக்கு ஒவ்வொரு மாதமும் 2-வது சனி, ஞாயிறு மற்றும் அடுத்து வரும் திங்கட்கிழமையை நிரந்தர நாட்களாக செயல்படுத்தி அறிவிப்பு வெளியிட வேண்டும்.

பிரதிநிதி மூலம் பொருட்கள் வழங்குவதற்கும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது, தாயுமானவர் திட்ட விநியோக நாட்களில் 'பிராக்ஸி' (Proxy) முறையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல் நலக்குறைவுடன் காணப்படும் பணியாளர்களுக்கு தாயுமானவர் திட்ட விநியோகத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

தாயுமானவர் திட்டம் செயல்படும் நாட்களுக்கு மட்டும் 'ப்ளூடூத்' முறையை ரத்து செய்ய வேண்டும். தாயுமானவர் திட்டத்துக்கான வண்டி வாடகை, ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி, ஊக்கத்தொகையை உடனடியாக வழங்குவதோடு, அன்றாட கூலி அடிப்படையில் உதவியாளர் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

ரேஷன் கடை பணியாளர்களின் செல்போன் 'ஹாட் ஸ்பாட்' மூலம் விற்பனை முனை கருவி (பி.ஓ.எஸ்.) இயங்குகிறது என தெரிவித்து 'ஓய்சிஸ்' (OASIS) நிறுவனத்தின் தரவுகளை மேம்படுத்த தக்க உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+