ரேஷன் அட்டைதாரர்களே.. இந்த மாசம் ரேஷன் வாங்கிட்டீங்களா? இன்று முதல் ரேசன் பொருட்களுக்கு பெரிய சிக்கல்
சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி வெளிவந்துள்ளது.. ரேஷன் கடை ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவினால், பரபரப்பு ஏற்பட் டு வருகிறது.. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க தலைவர் சொல்வது என்ன?
ரேஷன் கடை ஊழியர்கள், நீண்ட நாட்களாகவே சில முக்கிய பிரச்சனைகளை வைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.. அவைகளை அமல்படுத்தி வேண்டும் என்று கோரியும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், தமிழக அரசு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
விற்பனை பதிவுமுறை: அத்துடன், அத்தியாவசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம்கார்டுகள் வழங்கப்பட வேண்டும், விற்பனை முனையத்தில் 2 முறை விற்பனை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார்கள்..
மேலும், விற்பனை முனையத்தில் 2 முறை விற்பனை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம்கார்டுகள் வழங்கப்பட வேண்டும், என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகிறார்கள்..
முக்கியமாக, ரேஷன் கடைகளை பொதுவிநியோக திட்டத்தின் ஒரே துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து வருகிறார்கள்..
என்ன காரணம்: ஏன் என்றால், கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகள், வருவாய்த்துறை நிர்வாகத்திலும், டிஎன்சிஎஸ் நிர்வாகத்திலும், கூட்டுறவு துறை நிர்வாகத்திலும் சேர்ந்து பார்க்கப்படுகிறது.. இதனால், நடைமுறை சிக்கல்ள் நிறைய ஏற்படுவதாகவும், இவைகளை களைய வேண்டும் என்றால், பொது விநியோக திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், என்பதே ரேஷன் கடை ஊழியர்களின் கருத்தாக உள்ளது.
இவைகளை எல்லாம் மனதில் வைத்தே, தொடர்ச்சியான போராட்டங்களை ஒவ்வொரு மாவட்டங்களிலும், ரேஷன் கடை ஊழியர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.. எனினும் இவைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காததால், மீண்டும் ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளனர்..
போராட்டங்கள்: ஆனால், இந்த போராட்டத்தை காலவரையற்று நடத்தப்போவதாகவும், அதுவும் இன்று முதல் அதாவது ஜூன் 14 முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த போவதாகவும் முடிவு செய்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில், முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன...

இதுகுறித்து, அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியும் தந்திருக்கிறார். அப்போது, "தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் 3 துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் 3 துறையை சேர்ந்த அதிகாரிகள் 20 பேர் ஆய்வு என்ற பெயரில் பணியாளர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அதனால், பொதுவினியோக திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும். எங்களது 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 14 முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது என்றார்.
பேச்சுவார்த்தை: காலவரையற்ற ஸ்டிரைக்கை ஊழியர்கள் அறிவித்துள்ளதால், குடும்ப அட்டைதாரர்கள் பாதிக்கப்படு சூழல் உருவாகி உள்ளது.. எனினும், இது தொடர்பாக மாநில அரசு, இச்சங்கத்தினரை அழைத்து பேசுமா? அல்லது ஊழியர்கள் போராட்டத்தை கைவிடுவார்களா?? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications