அப்பட்டமான இந்தி திணிப்பு.. ரேஷன் கடை பெயரை 'ஜன் போஷன் கேந்திரா' என மாற்ற.. மத்திய அரசு முடிவு
சென்னை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 60 ரேஷன் கடைகளுக்கு 'ஜன் போஷன் கேந்திரா' என மறுபெயரிடுவதற்கான முன்னோடித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. ரேஷன் கடைகள் என அழைக்கப்படும் நியாய விலைக் கடைகளுக்கு (எஃப்.பி.எஸ்) விரைவில் புதிய பெயர் வைக்கப்படும்.
குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகள், ரேஷன் டீலர்களின் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் எனவும் மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக ரேஷன் கடைகள் இந்தியில் பெயர் மாற்றப்படும். பல மாநிலங்களில் இந்த விவகாரம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
கனிமொழி விமர்சனம்: திமுக எம்பி கனிமொழி வைத்துள்ள விமர்சனத்தில், மாநில மக்களின் பசிப்பிணிப் போக்க, நாட்டிலேயே முதல்முறையாக 1972ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை நிறுவி, பொது விநியோக முறையை சமூக பரவலாக்கம் செய்தவர் நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி தலைவர் கலைஞர் அவர்கள்.
இன்று இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் பொது விநியோக முறையின் முன்மாதிரியே தமிழ்நாட்டின் நியாயவிலைக் கடைகள்தான். ஆனால், இந்த திட்டங்களைத் தொடங்கியதில் துளியும் பங்கில்லாத ஒன்றிய பாஜக அரசோ, நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளின் பெயரை 'ஜன் போஷான் கேந்த்ராஸ்' என்று மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது வரலாற்றைத் திரிக்கும் முயற்சி. இதை வன்மையாக கண்டிக்கிறேன், என்று கனிமொழி விமர்சனம் வைத்துள்ளார்.
ரேஷன் கடைகள் மாற்றம்: தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கும்.. நாடு முழுக்க ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கும் முக்கியமான 3 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. அந்த அறிவிப்புகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
அறிவிப்பு 1: நாடு முழுக்க ரேஷன் அட்டை வைத்து இருப்பவர்களுக்கு மிக முக்கியமான நல்ல செய்தி ஒன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமரின் ரேஷன் கார்டு திட்டமான, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் தொடர்பான முக்கியமான அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ளார்.
அதன்படி 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் பிஎம் கரீப் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. PMGKAY ஆனது ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ உணவு தானியத்தை இலவசமாக வழங்குகிறது மற்றும் பொது விநியோக முறை (PDS) மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட 5 கிலோ மானிய உணவு தானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும். அதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 2: தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. விலாசம் மாற்றுவதற்கான அசத்தலான வசதிகளை மாநில அரசு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது. இது தொடர்பான முக்கியமான விபரங்களை ஆன்லைன் வழியாக வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகளில் செய்ய வேண்டிய மாற்றங்களை ஆன்லைன் வழியாக எளிமையாக செய்ய முடியும். முக்கியமாக விலாசம் மாற்றுவதை ஆன்லைன் வழியாக செய்ய முடியும்.
பின்வரும் முறைகளை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக விலாசம் மாற்ற முடியும். தமிழ்நாடு மின்-பொது விநியோக அமைப்பு போர்ட்டலை இதற்கு பார்வையிட வேண்டும்.
https://www.tnpds.gov.in/home.xhtml
வலது புறத்தில் நான் அடுத்து "ஸ்மார்ட் கார்டு சேவைகள்" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
பின்னர் நான் முகவரியை மாற்றுவதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
எனது புதிய முகவரி தொடர்பான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்- பின் குறியீடு, மாநிலம், பகுதி பெயர் மற்றும் பல என்பதை தெரு செய்ய வேண்டும்.
ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் TNEPDS உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும்.
1967, 1800-425-5901 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
அறிவிப்பு 3: ரேஷன் கார்டு வைத்து இருபவர்களுக்கான முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில் இ சேவை மையங்களில் இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ரேஷன் கார்டு வைத்து இருக்கும் பலரும் நேரடியாக அரசின் திட்டங்களை பெற்று வருகின்றனர். அதோடு அவர்கள் ஆதார் கார்டையும் பல திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இது இரண்டையும் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் எந்த திட்டத்தின் கீழ் பணம் பெற வேண்டுமானாலும் ரேஷன் கார்டு - ஆதார் கார்டை இணைந்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் இணைக்காத பட்சத்தில் அரசின் திட்டங்களை இழக்க நேரிடும்.
உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதாரை இணைக்கவில்லை என்றால், அரசு கொண்டு வரும் குறிப்பிட்ட கொள்கைகள் மற்றும் விதிமுறைகளைப் பொறுத்து கடுமையான விளைவுகள் ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications