காரணமே வேற.. மணிப்பூரில் நடப்பது இன அழிப்பா? குஜராத் மாடலில் குறிவைக்கப்படும் குகி - பகீர் பின்னணி
சென்னை: மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருவது இன அழிப்பு என்று பூவுலகின் நண்பர்கள் யூடியூப் சேனலில் கூறியுள்ள வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், இதன் பின்னணியில் இனம், மதம் கடந்து மற்றொரு பகீர் சதி இருப்பதாக கூறியுள்ளார். என்ன அது? விரிவாக பார்ப்போம்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக அவர் பேசியுள்ளதாவது, "மணிப்பூரில் 2 பிரிவு மக்கள் வாழ்கிறார்கள். ஒரு பிரிவு சமவெளியிலும், பழங்குடியினர்கள் மலைப்பகுதியிலும் வசிக்கிறார்கள். சமவெளியில் இருக்கும் பெரும்பான்மையினர்களே முதலமைச்சர் பதவி உட்பட அனைத்து அதிகார மையங்களிலும் உள்ளார்கள். இவர்கள், மலைவாழ் மக்களை ஒடுக்க அரசுடன் இணைந்து செயல்படுகிறார்கள்.

அரசு நடுநிலையாக இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சொல்கிறது. இதை கலவரம் என்று கூட சொல்ல முடியாது. அங்கு நடப்பது இன அழிப்பு. போஸ்னியா போன்ற நாடுகளில் இது நடந்தது. அப்படியானது இங்கு நடக்கிறதோ என்ற கேள்வி நடக்கிறது. வாக்கு அரசியல் சார்ந்து இருக்கக்கூடிய வெறுப்பை விதைத்து அங்குள்ள அரசு இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பது நியாயமான குற்றச்சாட்டு.
இதற்கு வாக்கு அரசியல் மட்டுமே காரணம் அல்ல. இதற்கு பின்னால் இருக்கக்கூடிய இயற்கை வளங்களை கொள்ளையடித்து, பழங்குடிகளிடம் இயற்கை வளம் சார்ந்து இருக்கக்கூடிய அதிகாரங்களை பறிப்பதும் நோக்கமாக உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு 370 சட்டப்பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டபோல், 371 சி சட்டப்பிரிவு மணிப்பூருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கிறது.

1971 ல் கொண்டு வரப்பட்ட அந்த அந்தஸ்தின்படி மணிப்பூரை நிர்வாகிக்க சுயாதீன அமைப்பு இருக்க வேண்டும். மலைவாழ் மக்களுடைய பாதுகாப்புக்காக அது இருக்க வேண்டும் என்று அந்த அந்தஸ்து சொல்கிறது. அந்த மாநிலத்தில் மலைவாழ் மக்களுக்கு இருக்கும் நிலம் சார்ந்த, விவசாயம் சார்ந்த உரிமைகள், நடைமுறைகளை மேலாண்மை செய்ய அந்த அமைப்பு இருக்கிறது.
அரசு அப்பகுதியில் எந்த திட்டத்தை நிறைவேற்றினாலும் அந்த அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். இதுபோல் மாவட்ட அளவில் 6 கமிட்டிகள் உள்ளன. 6 பிராந்தியங்களில் உள்ள மலை சார்ந்த பகுதிகளை, இயற்கை வளங்களை பாதுகாக்கும் அதிகாரம் பெற்றவையாக இந்த அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்பில் அந்த பழங்குடிகளே இருக்க முடியும்.

இந்த நிலையில்தான் மார்ச் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் சமவெளியில் வாழும் மெய்தி குழுவினர் பழங்குடி அந்தஸ்து கேட்கிறார்கள். அரசு தரப்பும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கேட்கிறது. காரணம் அந்த அந்தஸ்தை பெற்றால் பழங்குடிகளுக்கான அமைப்பில் அதிகாரம் பெற்று இயற்கை வளங்களை எடுக்க முடியும்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மற்ற தரப்பில் பதில் கேட்காமல் அன்றே தீர்ப்பு அளித்தார். மத்திய அரசின் பரிந்துரையின்படி மெய்திக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க உயர்நீதிமன்றம் தீர்ப்பளிகிறது. மத்திய அரசும் மெய்திக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் முடிவில் இறங்கியது. இதனை எதிர்த்து குகி இன மக்கள் போராடுகிறார்கள்.
மறுபக்கம் குகி இன பழங்குடிகளுக்கு எதிராக வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. உடனே அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்துகிறார்கள். அரசின் ஆயுதக் கிடங்கில் இருந்து ஆயுதங்களை எடுத்து தாக்குகிறார்கள். பலி எண்ணிக்கை, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அரசு சொன்னதை விட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

குஜராத்தில் என்ன செய்தார்களோ அதேபோன்ற சம்பவம் மணிப்பூரில் நடந்துள்ளது. இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளின் பட்டியலை வைத்திருந்ததைபோல் குகி இனத்தினரின் பட்டியலை அவர்கள் வைத்திருந்தார். அரசு இதற்கு உதவியது. இந்த வெறுப்பு அரசியல் மூலம் அவர்கள் சாதிக்க நினைப்பது அதிகாரத்துக்கு வருவது மட்டுமல்ல.
அங்குள்ள மண், இயற்கை வளங்களை வியாபாரம் செய்வது, சுரண்டுவதும் பின்புலமாக உள்ளது. இந்த நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் மீதான உரிமையும் எங்களுக்கே சொந்தம் என்று சொல்கிறார்கள். பழங்குடிகளின் உரிமைகளையும் நாங்களே முடிவு செய்வோம் என்ற பார்வையும் பாசிச தன்மையின் முக்கியமான அங்கம். கலாச்சார ரீதியாக, அரசியல் ரீதியாக மட்டும் இவர்கள் இவ்வாறு செயல்படுவது.
இயற்கை வளங்கள் சார்ந்த உரிமை, வியாபாரம், நோக்கமும் பின்னணியில் உள்ளது. அந்த சார்ந்த பார்வையும் இந்த விசயத்தில் நமக்கு இருக்க வேண்டும். அரசியலமைப்பு தந்த உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுவதை பார்க்கிறோம். ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் 370 பறிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது 371 சி யில் கை வைத்து உள்ளார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன." என்றார்.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications