சென்னை குன்றத்தூருக்கு பொக்லைனுடன் போன அதிகாரிகள்.. ரூ.23 கோடி அரசு நிலம் அதிரடியாக மீட்பு
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2.87 ஏக்கர் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து தொழிற்சாலை உள்பட பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வந்ததை கண்டுபிடித்த அரசு அதிகாரிகள், நேற்று அதிரடியாக சென்று மீட்டனர். இந்த நிலத்தின் மதிப்பு 23 கோடி என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையின் புறநகர் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு கோடிகளில் போய் கொண்டிருக்கிறது. இதனால் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியிருப்பவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது. சென்னையில் நீர்வழிப்பாதை, வாய்க்கால், அனாதீனம் போன்ற நிலங்கள் ஏராளமான உள்ளன. இப்படி பல்வேறு அரசு நிலங்களை சிலர் ஆக்கிரிமித்து, வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் சென்னை குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2.87 ஏக்கர் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அங்கு தண்ணீர் கம்பெனி, கட்டுமான பொருட்கள் விற்பனை கடை, கல் அறுக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வந்திருக்கிறார்கள். இது குறித்து பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாசில்தார் மாலினி, வருவாய் அலுவலர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டு இருந்த மதில் சுவர்களை பொக்லைன் எந்திரம் மூலம் முற்றிலுமாக இடித்து அகற்றினார்கள்.
அதேநேரம் தற்போது அந்த பகுதியில் கல் அறுக்கும் தொழிற்சாலை மற்றும் தண்ணீர் கம்பெனி இருப்பதால் அதனை அப்புறப்படுத்துவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதற்கும் மின்வாரிய அதிகாரிகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் அளித்தனர்.
குன்றத்தூரில் மீட்கப்பட்ட 2.87 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.23 கோடி என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே உரிய அறிவிப்பு எதுவும் இல்லாமல் வருவாய் துறை அதிகாரிகள் வந்து சுற்றுச்சுவரை இடித்து தள்ளி உள்ளதாக அரசு நிலத்தை பயன்படுத்தி வந்தவர்கள் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டதாக வருவாய்த்துறை அதிகாரிகள் அதற்கு விளக்கம் அளித்தனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications