10 ஆம் வகுப்பில் தோல்வியா? கவலையை விடுங்க! இன்று முதல் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாமே!
சென்னை: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் மறுதேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த வகையில் நேற்றைய தினம் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.

8.94 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8.18 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதம் ஆகும். வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே 5.95 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில் அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. குறைந்தபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 82.07 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவலையடையத் தேவையில்லை என அரசு தேர்வுகள் இயக்கககம் தெரிவித்துள்ளது. அவர்கள் மறுதேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்காக ஜூலை 2 ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும்.
அது போல் மறுகூட்டலுக்கு வரும் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். மறுதேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையோடு இன்று முதல் படித்தாலே 10ஆம் வகுப்புத் தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications