பதிவுக்கட்டணங்கள் ரத்து.. சட்டென "விலக்கு" தந்த தமிழக அரசு.. யாருக்கு பாருங்க.. அரசாணையே வந்துடுச்சு
சென்னை: உயர்த்தப்பட்டிருக்கும், பதிவுக்கட்டணத்தை, தமிழக அரசு பரிசீலித்து, கட்டணத்தையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்டட சூழலில், ஒரு இன்ப அதிர்ச்சியை தமிழக அரசு தந்துள்ளது.
பத்திரப்பதிவு கட்டணத்தை தமிழக அரசு சமீபத்தில் டபுள் மடங்காக உயர்த்தியிருந்தது. இது பொதுமக்கள் தரப்பில் அதிருப்தியை தந்துவரும்நிலையில், தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம், 9 சதவீதம் வசூல் செய்யப்படும் என்று இன்னொரு அறிவிப்பும் 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள்: அதாவது, ரூ. 25 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு அதிகபட்சமாக 1.15 லட்சம் வரை பதிவு கட்டணம் வசூல் செய்யப்பட்ட நிலையில் இனிமேல் ரூ.2.25 லட்சம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கு பதிவு கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
இது நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. காரணம், ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தும்போது, காலஅவகாசம் தரவேண்டும். ஆனால், உடனே அடுத்த நடைமுறை வந்துள்ளது.. அதுமட்டுமல்ல, வழிகாட்டி மதிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்னொருபக்கம் பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியையே தருவதாக பொதுமக்கள் தரப்பிலும் கூறப்படுகிறது.
பதிவுத்துறை: இந்த கட்டண உயர்வினால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பும் ஏற்படும் என்றும், கட்டுமான நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள். எனவே, அதனால், பத்திரப்பதிவு துறை, இந்த கட்டண உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நாலாபுறமும் வெடித்து கிளம்பியபடியே உள்ளன.
இந்நிலையில், தமிழக அரசு தற்போது ஒரு சர்ப்ரைஸ் தந்துள்ளது. அதன்படி, பட்டியல் இனத்தவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சலுகைகள்: பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு, தமிழக பல்வேறு திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.. சலுகைகளை வழங்கி வருகிறது.. அவர்களின் நலனில் தொடர்ந்து அக்கறையும், நலனும் காட்டி வருகிறது. அனைத்து துறைகளிலுமே இந்த நலன்கள், அவர்களுக்காகவே வழங்கப்பட்டு வருகிறது.. அந்தவகையில்தான், தமிழக அரசின் சார்பில் பத்திர பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்திலும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இத்தனை நாளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக சேரும் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு வரையிலும் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக சேருபவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
சபாஷ்: இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.. அதன்படி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் பட்டியல் இனத்தவர்களுக்கு பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே சலுகை, அனைத்து தரப்பினருக்கும் விரைவில் விரிவுப்படுத்தப்படும் என்றும் நம்பப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications