ரூ.5 லட்சம் இலவச சிகிச்சைக்கு தரும் மத்திய அரசு.. ஆயுஷ்மான் பாரத் வய வந்தனா திட்டத்தில் புது அதிரடி
சென்னை: உலகிலேயே மிகப்பெரிய, அரசினால் முழுமையான மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டத்தான் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டமாகும்.. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த கார்டு உள்ள பயனாளிகள் அரசின் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகள் இணைவதற்கான விரிவான மருத்துவமனை இணைப்பு மற்றும் மேலாண்மை வழிகாட்டுதல்கள் என்னென்ன தெரியுமா?
நாட்டிலுள்ள குடிமக்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காகவே 2018ல் கொண்டுவரப்பட்ட திட்டம் ஆயுஷ்மான் பாரத் பிரதார் ஜன் ஆரோக்கியா திட்டமாகும். வருடத்துக்கு ஒரு குடும்பத்துக்கு, ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது..

ஆயுஷ்மான் பாரத் பிரதார் ஜன் ஆரோக்கியா என்கிற மருத்துவ காப்பீடு திட்டத்தின்மூலம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடிகிறது.. இதற்கு எந்தவிதமான பாலின பேதம், வேறுபாடுகள் கிடையாது. ஆனால், IN PATIENTS அதாவது, மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மட்டுமே இந்த திட்டத்தினால் பலனடைய முடியும்.
புற்றுநோய், இதய நோய்கள், நீரிழிவு உள்ளிட்ட 26 பிரிவுகளில் 1669 மருத்துவ முறைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்
யாருக்கெல்லாம் கிடைக்காது
ஆனால், டூ வீலர்கள், 3 சக்கர வாகனம் அல்லது கார் போன்ற வாகனங்களை சொந்தமாக வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், மாத வருமானம் ரூ.10,000க்கு மேல் உள்ளவர்கள், விவசாய இயந்திரங்கள், உபகரணங்கள், சொந்த வீடு, கிசான் அட்டை வைத்திருப்பவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலமுள்ள விவசாயிகள், வீடுகளில் ஏசி, லேண்ட்லைன் போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டத்தின் பலனை பெற முடியாது.
இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் இணைவதற்கான விரிவான மருத்துவமனை இணைப்பு மற்றும் மேலாண்மை வழிகாட்டுதல்களை தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ளது..
முதியோருக்கான வய வந்தனா
அதில், ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் மற்றும் முதியோருக்கான வய வந்தனா சுகாதார அட்டைகள் வைத்திருப்போர் இடம் பெயர்தல் திறன் என்ற அம்சத்தின் கீழ் பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள 31,466 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்றும் தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கடந்த வருடம், ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் நோக்கத்தை மத்திய அரசு விரிவுபடுத்தியிருந்தது.. அவர்களின் சமூக பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களையும் உள்ளடக்கிய நிலையில், ஆயுஷ்மான் வய வந்தனா திட்டத்தில், 1.06 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவ சேவை தொடர்பான விண்ணப்பங்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை
மாநிலங்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இணையமைச்சர், "மத்திய அரசு 2024ஆம் ஆண்டின் அக்டோபர் 29ம் தேதியன்று, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தி, அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களையும் உள்ளடக்கியது.
இந்த முயற்சியின் கீழ் பயனாளிகள் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டைகள் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை சலுகைகளைப் பெறலாம்.
31,466 பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகள்
இதுமட்டுமல்லாமல், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் இடம் பெயர்தல் திறன் அம்சம், தகுதியான பயனாளிகள் வய வந்தனா திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 31,466 பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் அவர்கள் வசிக்கும் இடத்தைப் பொருட்படுத்தாமல், சுகாதார சேவைகளை அணுக அனுமதிக்கிறது.
இது நாடு முழுவதும் உள்ள முதியோர்களுக்கு தரமான சுகாதாரப் பராமரிப்பை தடையற்ற முறையிலும் மற்றும் சமமான வகையிலும் அணுகலை உறுதி செய்கிறது. வய வந்தனா அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட 14,194 தனியார் சுகாதார சேவை வழங்கும் மையங்களின் பரந்த வலையமைப்பு மூலம் சிகிச்சையைப் பெறலாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications