நீதிபதிகள் நியமனம் முறையாக நடக்கவில்லை.. 79% உயர்சாதியினர்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு
சென்னை: நீதிபதிகள் நியமனம் முறையாக நடைபெறுவதில்லை என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் நீதிபதிகளின் நியமனங்களில் 79 சதவீதம் பேர் உயர்ஜாதியை சேர்ந்தவர்கள் எனவும் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்படுவதில்லை எனவும் சந்துரு குற்றம்சாட்டியுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு மற்றும் ஹரி பரந்தாமன் ஆகியோர் இன்று சென்னையில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர், அப்போது பேசிய நீதியரசர் சந்துரு, "நீதிபதிகள் நியமனம் முறையாக நடப்பதில்லை. நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படுவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேசுகையில், "நீதிபதிகள் நியமனம் தொடர்பான புதிய நடைமுறையில் ஒரு மாநிலத்திலிருந்து யார் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றுகிறார்களோ அவரையும், அவருடைய கருத்தையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான நீதிபதியை கன்சல்டிங் சார்ஜ் என்றும் சொல்கிறார்கள். அதாவது அவரை ஆலோசனை வழங்கக்கூடிய நீதிபதி என்று குறிப்பிடுகிறார்கள்.
அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் இருந்து செல்லக்கூடிய பெயர்களை அதற்குச் சிபாரிசோ பரிந்துரையோ செய்ய அங்குள்ள நீதிபதிகளான சுந்தரேஷ் மற்றும் மகாதேவனுக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் நடைபெறவில்லை. முன்பு, நீதிபதிகள் நியமனத்துக்கு உறுப்பினர்கள் கொண்ட நிரந்தர அமைப்பு இருந்தது.
இப்போது நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்படுவதில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக 34% பேர் பிராமண சமுதாயத்தினராக உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் சுமார் 10% உள்ளவர்களுக்கு மட்டுமே நீதிபதிகள் நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
நீதிபதிகளுக்கான பணியிடங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. போன்ற பிரிவினருக்குப் போதிய அளவில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி பணியிட நியமனங்களில் 79% உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள்.
அதன்படி பார்த்தால், நீதிபதிகள் நியமனம் முறையாக நடப்பதில்லை எனத் தெரியவருகிறது. உச்ச நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்ற வழிகாட்டுதல் படி நீதிபதிகள் நியமனம் நடப்பதில்லை என்பது தெளிவாகிறது. நீதிபதி நியமனமானது ஒரு சில குழுக்களிலிருந்து நியமிக்கப்படாமல் நாடு முழுவதும் பரவலாக நியமனங்கள் மூலம் நடைபெறவேண்டும்.
பழங்குடியினர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நீதிபதிகள் நியமனத்தில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். கேரளாவில் 74% அளவுக்கு கீழமை நீதிமன்றங்களில் பெண்கள்தான் நீதிபதிகளாக இருந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications