சென்னையில் ஒருவழிப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளே உஷார்.. போலீஸ் போட்ட அதிரடி திட்டம்
சென்னை: ஒருவழிப்பாதையில் புகுந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை பிடிக்க சென்னை மாநகர டிராபிக் போலீஸ் அதிரடியாக ரோடு ராஜா என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு விளம்பரத்தையும் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
சென்னையில் தமிழ்நாட்டில் எங்குமே இல்லாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இத்தனைக்கும் சென்னைக்குள் எந்த வெளியூர் பேருந்துகளும் வருவது இல்லை.. ஏன் கனரக வாகனங்கள் கூட முக்கிய நேரங்களில் ஊருக்குள் வரவே முடியாது.. சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் டவுன் பஸ்களை போல் புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் ஓடுகின்றன.

அப்படி இருந்தும் சென்னைக்குள் தாங்க முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்படுகிறது. சென்னையில் இங்கு தான் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் என்று எந்த பகுதியையும் சொல்ல முடியாது.. அந்த அளவிற்கு வாகன நெருக்கம் மிக அதிகம் ஆகும்.
சென்னையின் மெயின் சாலைகளான ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, வடபழனி சாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, ரேடியல் சாலை, வேளச்சேரி - தாம்பரம் சாலை, ஆந்திராவின் தடா செல்லும் சாலை, திருவள்ளூர் செல்லும் சாலை, திருவெற்றியூர் சாலை, எண்ணூர் சாலை, நியூ ஆவடி ரோடு, பூந்தமல்லி சாலை, ஆற்காடு சாலை, திருப்பதி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை என எந்த சாலையிலும் வாகனங்கள் எண்ணிக்கை மிக குறைவாக இல்லை.. வாகன நெருக்கம் மிக அதிகமாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 கோடி பேர் வரை இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.. இதில் பலரும் கார், பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் நாள்தோறும் பயணிக்கிறார்கள்.
சென்னையில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் சில நிமிடங்கள் வாகனங்கள் நெரிசலில் நின்றாலே நீண்ட கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்படும். இதன் காரணமாக பல்வேறு சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மெயின் சாலைகள் என்று இல்லாமல், நகரத்திற்குள் சிறிய தெருக்களில் செல்லும் பல்வேறு சாலைகள் கூட ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன.
சில வாகன ஓட்டிகள் விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் பயணிப்பதை தினசரி வாடிக்கையாக வைத்துள்ளனர்.. எல்லா நேரமும் போலீசாரால் கண்காணிப்பு பணியில் ஈடுபட முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில் ஒருவழிப்பாதையில் புகுந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை பிடிக்க சென்னை மாநகர டிராபிக் போலீஸ் அதிரடியாக ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு விளம்பரத்தையும் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
நடிகர் பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்துனு மற்றும் நடிகர் பகவதி பெருமாள் ஆகியோர் அந்த விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்துள்ளனர்.. போலீசாரின் இந்த திட்டப்படி, ஒருவழிப்பாதையில் பயணிப்போரை செல்பி அல்லது புகைப்படம் எடுத்து ரோடு ராஜா என்ற ஹாஷ்டாக்கில் போட்டால் போலீசார் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications