சென்னை கோயம்பேட்டுக்கு வந்த தாஜ்மகால் ரோஜாக்கள்! வாங்க அலைமோதிய காதலர்கள்!
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள பூ மார்க்கெட்டில் ரோஜா பூக்கள படுஜோராக விற்பனைக்கு வந்துள்ளன. மொத்தம் 450 டன் ரோஜாக்கள் வந்துள்ளனவாம். இவை வேகமாக விற்றுத் தீர்வதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
காதலர் தினம் இன்று உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு பரிசு பொருட்களை வாங்கித் தருவார்கள்.

அதில் முக்கியமானது ரோஜா பூக்கள் ஆகும். இந்த பூக்களை காதலிக்கு காதலர்கள் வாங்கிக் கொடுப்பார்கள். அத்துடன் அவரவர் வசதிக்கேற்ப பரிசு பொருட்களை வாங்கிக் கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.
காதலர் தினத்தையொட்டி நேற்று இரவு முதலே ரோஜா பூக்கள் கோயம்பேடு சந்தைக்கு வரத் தொடங்கின. அதாவது அந்த காலங்களில் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, பிங்க், உள்ளிட்ட நிறங்களில் ரோஜாக்கள் இருக்கும்.
ஆனால் இந்த முறை டிரென்டிங்கில் நிறைய நிறங்களில் ரோஜாக்கள் வந்துள்ளன. அதாவது தாஜ்மகால் ரோஜாக்கள் வந்துள்ளன. அவை 20 பூக்கள் கொண்ட பொக்கே 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அது போல் பிங்க் நிற பூக்கள் கொண்ட பூங்கொத்து 20 எண்ணிக்கை ரூ 400 க்கும் சிவப்பு நிற ரோஜாக்கள் ரூ 350 -க்கும், மஞ்சள் நிறம் ரூ 300-க்கும் விற்பனையாகிறது. அதிகாலை முதலே கோயம்பேடு சந்தைக்கு வரும் காதலர்கள் பூக்களை வாங்கிச் செல்கிறார்கள்.
அது போல் காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்வதற்காக ரோஜா பூ மாலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் சாக்லேட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. அதிலும் இதய வடிவிலான சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றையும் முன்கூட்டியே ஆர்டர் செய்து காதலர்கள் வாங்கிச் செல்கிறார்கள். இன்று தியேட்டர்கள், பூங்காக்கள், மால்களில் கூட்டம் அலைமோதும்.












Click it and Unblock the Notifications