சென்னையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடிகள்.. என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள்.. ஓபிஎஸ்
சென்னை: எப்பொழுது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போயுள்ளனர். காவல் துறையிடம் உள்ள அச்சம் ரவுடிகளிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதற்குக் காரணம், ரவுடிகளை தி.மு.க. அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்காததுதான் என்று மக்கள் தெரிவிக்கின்றனர் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "ஆளுநர் மாளிகைமீது பெட்ரோல் வெடி குண்டு தாக்குதல், சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில்மீது குண்டு வீச்சு, சென்னையில் உணவக மேலாளர் ரவுடிகளால் அடித்துக் கொலை என்ற வரிசையில் சென்னை கொடுங்கையூர், ஆர்.ஆர். நகரில், குடியிருப்புகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் ரவுடிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சூறையாடப்பட்ட வாகனங்களை சரி செய்யவே இலட்சக்கணக்கான ரூபாய் ஆகும் என்று பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தி.மு.க. அரசால் திணிக்கப்படும் தொடர் நிதிச் சுமை ஒருபுறம் என்றால், மறுபுறம் சட்டம் ஒழுங்கின்மை காரணமாக கூடுதல் நிதிச் செலவு ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படுகிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. எப்பொழுது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போயுள்ளனர். காவல் துறையிடம் உள்ள அச்சம் ரவுடிகளிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதற்குக் காரணம், ரவுடிகளை தி.மு.க. அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்காததுதான் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பொதுமக்கள் அச்சமின்றி வாழக்கூடிய நிலைமையை உருவாக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications