பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு புதிய பதவி.. அதுவும் மாவட்ட அளவில்..! பரபரப்பு
சென்னை: கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு பாஜகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்துள்ள மதுரமங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவரது உண்மையான பெயர் என்.குணசேகரன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது இருக்கிறது. குறிப்பாக 8 கொலை வழக்கு, 11 கொலை முயற்சி வழக்குகளும் இருக்கிறது.
படப்பை குணா: இந்த விவகாரம் தொடர்பாகக் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இவர் மீது போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும் நிலுவையிலேயே இருக்கிறது. போலீசார் படப்பை குணாவை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கடந்தாண்டு அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இருப்பினும், குணா கடந்தாண்டு நவம்பரில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதற்கிடையே படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். அவர் பாஜகவில் மாவட்ட பொறுப்பிலும் இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே கட்சி பணிகளில் படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் தீவிரமாகச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் படப்பை குணா செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
புதிய பதவி: இந்தச் சூழலில் தான் படப்பை குணா பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. மேலும், அவர் பாஜக சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகள், போராட்டங்களிலும் தொடர்ந்து கலந்து கொண்டே வந்தார். இந்தச் சூழலில், பாஜகவில் இணைந்த படப்பை குணாவுக்கு புதிய பதவி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜகவில் இணைந்த அவருக்குக் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணித் தலைவர் பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ். பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், " மாநில தலைவர் கே அண்ணாமலை மற்றும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாநில செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோத் பி செல்வம் ஒப்புதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர் ஆலோசனை படியும், மாநில ஓபிசி அணி தலைவர் சாய் சுரேஷ் ஆலோசனை படியும் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக குணசேகரன் நியமிக்கப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நியமனம்: அதன்படி பாஜகவின் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணித் தலைவராகப் படப்பை குணா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக 50+ வழக்குகளைக் கொண்ட பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜக மாநில பட்டியலின அணி மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications