Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் மெகா மாத தவணை முறைகேடு.. 1100 கோடி மோசடி.. 4 பேரை கைது செய்து அமலாக்கத்துறை அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1100 கோடி ரூபாய் நிதி மோசடி செய்த வழக்கில் தமிழக நிறுவனத்தின் இயக்குநர்கள் 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

'டிஸ்க் அஸட்ஸ் லீடு இந்தியா' (டால் -DAL ) என்ற நிறுவனம், நிலங்கள் வாங்கித் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேரிடம் இருந்து மாதத் தவணையில் பணம் வசூல் செய்துள்ளது.

முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி 1100 கோடி ரூபாயை இந்த நிறுவனம் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

டிஸ்க் அஸட்ஸ்

டிஸ்க் அஸட்ஸ்

டிஸ்க் அஸட்ஸ் லீடு இந்தியா என்ற நிறுவனம் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2006ல் தொடங்கப்பட்டது. மாதா மாதம் பணம் கட்டினால் குறிப்பிட்ட வட்டியுடன் பணம் அல்லது நிலம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதோடு, இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் 3000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் இவர்களின் பணம் கட்டி வந்தனர்.

1100 கோடி

1100 கோடி

ஆனால் இந்த நிறுவனம் சொன்னபடி கட்டிய பணத்தையும் கொடுக்கவில்லை, நிலத்தையும் கொடுக்கவில்லை. இதனால் அந்த நிறுவனத்தில் பணம் கட்டியவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 'செபி' அமைப்பிடமும் இவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. நிலம் வாங்கித் தருவதாக 12 லட்சம் பேரிடம் இதுவரை ரூ.1,100 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.207 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

செபி

செபி

இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியமும் (செபி), இந்நிறுவனம் இனிமேல் யாரிடம் இருந்தும் முதலீடுகளைப் பெறக் கூடாது என்றும், புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்றும் தடை விதித்தது. மேலும், இந்தமோசடி தொடர்பாக வந்தபுகார்களின்பேரில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

 வழக்கு பதிவு

வழக்கு பதிவு

இந்நிலையில், இந்நிறுவனம் சட்ட விரோதமாகப் பணப் பரிவர்த்தனைகள் செய்திருப்பதாகக் கூறி பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அதன் நிர்வாகிகள் உமாசங்கர், அருண்குமார், ஜனார்த்தனன், சரவணக்குமார் ஆகிய 4 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. அதன்பேரில், உமாசங்கர் உட்பட 4 பேரையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது

கைது

இதையடுத்து இந்த நிறுவனம் மீது தொடர்ந்து புகார் கொடுக்கப்பட்டு வந்தநிலையில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்தனர். பிப்ரவரி 25, 2022 அன்று இவர்களின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அமலாக்கத்துறை இந்த நால்வரையும் கைது செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+