தமிழகத்தில் மெகா மாத தவணை முறைகேடு.. 1100 கோடி மோசடி.. 4 பேரை கைது செய்து அமலாக்கத்துறை அதிரடி!
சென்னை: 1100 கோடி ரூபாய் நிதி மோசடி செய்த வழக்கில் தமிழக நிறுவனத்தின் இயக்குநர்கள் 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
'டிஸ்க் அஸட்ஸ் லீடு இந்தியா' (டால் -DAL ) என்ற நிறுவனம், நிலங்கள் வாங்கித் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேரிடம் இருந்து மாதத் தவணையில் பணம் வசூல் செய்துள்ளது.
முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி 1100 கோடி ரூபாயை இந்த நிறுவனம் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

டிஸ்க் அஸட்ஸ்
டிஸ்க் அஸட்ஸ் லீடு இந்தியா என்ற நிறுவனம் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2006ல் தொடங்கப்பட்டது. மாதா மாதம் பணம் கட்டினால் குறிப்பிட்ட வட்டியுடன் பணம் அல்லது நிலம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதோடு, இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் 3000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் இவர்களின் பணம் கட்டி வந்தனர்.

1100 கோடி
ஆனால் இந்த நிறுவனம் சொன்னபடி கட்டிய பணத்தையும் கொடுக்கவில்லை, நிலத்தையும் கொடுக்கவில்லை. இதனால் அந்த நிறுவனத்தில் பணம் கட்டியவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 'செபி' அமைப்பிடமும் இவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. நிலம் வாங்கித் தருவதாக 12 லட்சம் பேரிடம் இதுவரை ரூ.1,100 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.207 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

செபி
இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியமும் (செபி), இந்நிறுவனம் இனிமேல் யாரிடம் இருந்தும் முதலீடுகளைப் பெறக் கூடாது என்றும், புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்றும் தடை விதித்தது. மேலும், இந்தமோசடி தொடர்பாக வந்தபுகார்களின்பேரில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு பதிவு
இந்நிலையில், இந்நிறுவனம் சட்ட விரோதமாகப் பணப் பரிவர்த்தனைகள் செய்திருப்பதாகக் கூறி பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அதன் நிர்வாகிகள் உமாசங்கர், அருண்குமார், ஜனார்த்தனன், சரவணக்குமார் ஆகிய 4 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. அதன்பேரில், உமாசங்கர் உட்பட 4 பேரையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது
இதையடுத்து இந்த நிறுவனம் மீது தொடர்ந்து புகார் கொடுக்கப்பட்டு வந்தநிலையில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்தனர். பிப்ரவரி 25, 2022 அன்று இவர்களின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அமலாக்கத்துறை இந்த நால்வரையும் கைது செய்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications