திமுக தொடர்ந்த வழக்கிலிருந்து யாரும் தப்பியதாக வரலாறு இல்லை! இனிதான் கச்சேரி இருக்கு -ஆர்.எஸ்.பாரதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தொடர்ந்த வழக்கிலிருந்து இதுவரை யாரும் தப்பியதாக வரலாறு இல்லை என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    EPSக்கு எதிரான வழக்கை கேட்டு வாங்கிய திமுக

    மேலும், திமுக தொடரும் வழக்குகள் அனைத்தும் உண்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும் என அவர் கூறினார்.

    விரைவில் உள்ளே போக வேண்டியவர்கள் போவார்கள், அனுபவிக்க வேண்டியதை அனுபவிப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களை மனதில் வைத்து பேசினார்.

    ஆர்.எஸ்.பாரதி

    ஆர்.எஸ்.பாரதி

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் வழக்குத் தொடர்ந்த திமுக சட்டத்துறை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மிகவும் உற்சாகமாக பேசிய அவர், திமுக தொடரும் வழக்குகள் உண்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும் என்றும் திமுக தொடர்ந்த வழக்கிலிருந்து யாரும் தப்பியதாக வரலாறு இல்லை எனவும் தெரிவித்தார்.

    எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    திமுக தொடர்ந்த வழக்குகளால் பலர் தண்டனை பெற்றிருக்கிறார்கள் சிலர் தண்டனைக் காலத்தையே அனுபவித்து முடித்திருக்கிறார்கள் இதனால் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கிலும் திமுக தான் வெற்றிபெறும் என நம்பிக்கை பொங்க கூறினார். மேலும், விரைவில் உள்ளே போக வேண்டியவர்கள் போவார்கள், அனுபவிக்க வேண்டியதை அனுபவிப்பார்கள் என ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுக் கூறினார். நேற்று எஸ்.பி.வேலுமணி வழக்கு, இன்று எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு என வேகமெடுத்திருப்பதால் இனி கண்கூடாக பல காட்சிகளை நீங்கள் பார்க்கலாம் என செய்தியாளர்களிடம் கூறினார்.

    கொடநாடு வழக்கு

    கொடநாடு வழக்கு

    டெண்டர் ஊழல் வழக்கை போல் கொடநாடு கொலை கொள்ளை வழக்கும் இனி வேகமெடுக்கும் என நம்பிக்கை கூறிய ஆர்.எஸ். பாரதி, 2016ம் ஆண்டு கண்டெய்னரில் 570 கோடி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ உண்மையை சொல்லவில்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பிடிபட்டது ஒரு ரூபாய், 2 ரூபாயாக இருந்தால் பரவாயில்லை, 570 கோடி ரூபாய் பணம் யாருக்கு சொந்தமானது என்பதை மக்களுக்கு சொல்வதில் சிபிஐ க்கு என்ன தயக்கம் என வினவினார்.

    உண்மை வெளிவரும்

    உண்மை வெளிவரும்

    எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் ஊழல் வழக்கில் விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் எனக் கூறிய ஆர்.எஸ்.பாரதி, யார் மீதும் வீண்பழி சுமத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது என்றும் அவ்வாறு இதுவரை சுமத்தியதும் இல்லை எனவும் தெரிவித்தார். ஆர்.எஸ்.பாரதி நம்பிக்கையோடு பேசுவதை பார்த்தால் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவருக்கும் எதிரான வழக்குகளில் இனி பல்வேறு அதிரடிகள் அரங்கேறலாம் எனத் தெரிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+