பகலில் லேடிஸ் ஹாஸ்டல்.. இரவில் உல்லாச உலகம்.. சென்னையை மிரள வைத்த விபச்சார பிஜி
சென்னை: சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்படுகிறது. அந்த விடுதியில் விபச்சாரம் நடப்பது உறுதியான நிலையில், விடுதி நடத்திய உல்லாச கும்பல் தலைவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு சில இளம்பெண்கள் தங்கி வசித்து வருகிறார்கள். அவர்கள் பகலில் வேலைக்கு செல்வது போல டிப்-டாப்பாக உடை அணிந்து வெளியில் சென்றுள்ளார்கள்.. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் அது உண்மையிலேயே பெண்கள் தங்கும் விடுதி என்றே முதலில் நம்பி இருக்கிறார்கள்.

ஆனால் அந்த விடுதிக்கு, இரவு நேரத்தில் அடிக்கடி ஆண்கள் சத்தம் இல்லாமல் வந்து சென்றுள்ளார்கள். பெண்கள் விடுதியில் இரவு நேரத்தில் ஆண்களுக்கு என்ன வேலை? என்று அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. குறிப்பாக சமீப காலமாக இரவு நேரங்களில் ஆண்கள் வந்து சென்றதால், உண்மையில் அது வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி இல்லை என்பது உறுதியானது.. இதனிடையே உல்லாச தொழில் செய்யும் பெண்கள் தங்கி இருக்கும் விடுதி என்பது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசியமாக அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்
இதையடுத்து விபசார தடுப்பு பிரிவு போலீசார், டி.பி.சத்திரம் பகுதியில் இயங்கி வந்த சந்தேகத்திற்கு உரிய விடுதியில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது விபச்சார தொழில் ஜோராக நடப்பது உறுதியானது.. போலீசார் நடத்திய சோதனையில் 4 அழகிய இளம்பெண்களை வைத்து சிலர் விபச்சார தொழில் செய்தது உறுதியானது. இதையடுத்து அழகிகள் நான்கு பேரையும் மீட்ட போலீசார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த உல்லாச விடுதியை நடத்தி வந்தது ஜூடி என்ற அனு (வயது 28) என்பது தெரியவந்தது. அவர் கோவையைச் சேர்ந்தவர் என்பதம் அவர்தான் விபசார கும்பலின் தலைவியாக செயல்பட்டார் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications