இவ்வளவு பெர்ர்ரிய லெட்டரை படிக்கிறதுக்குள்ள கொரோனாவே உலகத்தை விட்டு போய்டும்.. எஸ் வி சேகர் கிண்டல்
சென்னை: இவ்வளவு பெர்ர்ரிய லெட்டரை மோடி, படிக்கிறத்துக்குள்ள கொரானாவே உலகத்தை விட்டு போயிடும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமலின் கடிதம் குறித்து எஸ் வி சேகர் கிண்டல் செய்துள்ளார்.
Recommended Video
கொரோனா நோய் பரவலைத் தடுக்க கடந்த 25-ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திடீர் ஊரடங்கு உத்தரவினால் ஏழை எளிய கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டது. வீட்டு வேலைகளை செய்து வந்தோர் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் ஊதியம் இல்லாமல் அடுத்த வேளை உணவுக்கே அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு
இந்த நிலையில் ஏழை மக்களின் இன்னல்களை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அதில் அவர் ஊரடங்கு உத்தரவை திட்டமிடாமல் அமல்படுத்தியது, அடுத்த வேளை உணவுக்கே எண்ணெய் இல்லாத ஏழைகளை விளக்கேற்ற சொன்னது, பணமதிப்பிழப்பை போல் இந்த நடவடிக்கையால் மக்கள் அவதிப்படுவது உள்ளிட்டவற்றை தொகுத்து 3 பக்கங்களை கொண்ட கடிதத்தை எழுதியுள்ளார். மிகவும் காட்டமாக இருந்த கடிதத்தை பெரும்பாலானோர் பாராட்டினர்.

கொரோனா
இந்த நிலையில் எஸ் வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலை விமர்சித்து பதிவு போட்டுள்ளார். அதில் கமலின் லெட்டரை டேக் செய்து "இவ்வளவு பெர்ர்ரிய லெட்டரை மோடி அவர்கள் படிக்கிறத்துக்குள்ள கொரானாவே உலகத்தை விட்டு போயிடும்" என குறிப்பிட்டுள்ளார்.

குடிமக்கள்
இது போல்பாஜகவில் இணைந்துள்ள நடிகை காயத்ரி ரகுராம் நேற்று முன் தினம் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள நீங்கள் ஏன் சீன அதிபருக்கு எழுதவில்லை. ஏன் தப்லீகீ ஜமாத்துக்கு எழுதவில்லை. ஏன் அவர்களது தோல்வியை சுட்டிக் காட்டக் கூடாது? அரசின் உத்தரவை மதிக்காமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள்.
|
எழுதினால் என்ன
தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்தார்கள் என கூறுகிறீர்களா, தமிழக எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு கடிதம் எழுதுங்கள். உங்களுக்கு பிரச்சினை இருந்தால் முதலில் மாநில அரசுக்கு எழுதுங்கள் என கேட்டிருந்தார். இந்த நிலையில் இந்திய பிரஜை இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதாமல் சீன அதிபருக்கு ஏன் எழுத வேண்டும் என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications