மூளையில் ரத்தக்கசிவு.. ஜக்கி வாசுதேவுக்கு அவசர அறுவை சிகிச்சை.. டெல்லி அப்போலோவில் அனுமதி!
சென்னை: கோவை ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் திடீரென்று ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கோவையில் ஈஷா மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பிரமாண்டமான ஆதியோகி சிலையை காண இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

அந்த வகையில் சமீபத்தில் வந்த மகாசிவராத்திரி விழா ஈஷா மையத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில்கோவை ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்று இருந்தார். மேலும் நடிகர், நடிகைகள் உள்பட பல துறை பிரபலங்கள் விழாவில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு அதிக தலைவலியும், வாந்தியும் ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 17 ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. டாக்டர் வினித் சூரி எம்ஆர்ஐ ஸ்கேனுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஜக்கி வாசுதேவின் மூளையில் ரத்த கசிவு கண்டறியப்பட்டது. மேலும் அவருக்கு உடனடியாக மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
இதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து டாக்டர்கள் வினித் குரு, பிரணவ் குமார், சுதீர் தியாகி, சட்டர்ஜி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மருத்துவமனையில் அவசரமாக அறுவை சிகிச்சை செய்தது. மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை என்பது வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
இதையடுத்து சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார். இருப்பினும் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவர் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார்.
இதுபற்றி ஈஷா அறக்கட்டளை சார்பில், ‛‛ கடந்த 4 வாரங்களாக சத்குரு கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இருந்தபோதிலும், சத்குரு மஹாசிவராத்திரியிலும் டெல்லியில் நடந்த மற்ற கூட்டங்களிலும் முழுமையாக பங்கேற்றார். சில நாட்களுக்கு முன்பு சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது. சூழ்நிலைகள் கடுமையாக இருந்தபோதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாகச் சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டுகிறார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications