Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமானுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி.. சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீப நாட்களாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். இன்று சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமீப கால செயல்பாடுகள் மற்றும் கட்சியின் உள் கட்டமைப்பில் கவனம் செலுத்தாதது வருத்தத்தை ஏற்படுத்துவதாக கூறி விலகியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் சமீபகாலமாக பிடிக்கவில்லை என்று கூறி அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். மண்டல நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து வருகிறார்கள்.

seeman naam tamilar party vijay

அண்மையில் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இவ்வாறாக அடுத்தடுத்து நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருவதால் நாம் தமிழர் கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இன்று சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தவர் ஜெகதீஷ். இந்த நிலையில் கட்சியில் சமீப கால செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், கட்சியின் உள் கட்டமைப்பில் கவனம் செலுத்தாதது வருத்தம் அளிப்பதாகவும் கூறி நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.. சேலம் மேற்கு M.Sc., M.Phil DML,Ph.D. ஆகிய நான் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இதுவரை என்னோடு களமாடிய உண்மையான களபோராளிகளுக்கும் என்னுடைய புரட்சிகர நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

நான் மிகவும் நேசித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது கடினமாக இருந்தாலும், சமீப கால செயல்பாடுகள் கட்சியின் உள் கட்டமைப்பில் கவனம் செலுத்தாது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதன் அடிப்படையில் கனத்த இதயத்தோடு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். கொள்கை கோட்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்றும் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் நினைவில் தமிழ் தேசியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பேன்.. நன்றி... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+