Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஜாதி பார்த்து வேட்பாளர்.. விசுவாசிகளுக்கு சீட் இல்லை” சசிகலா கட்சிக்குள் கொதிப்பு! கடுப்பில் தலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா கட்சி, ராமதாஸ் உடன் இணைந்து வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், சசிகலாவின் அனைத்​திந்​திய புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்​றக் கழகத்திற்குள் அதிருப்தி அலைகள் எழுந்துள்ளன. சசிகலா, தனக்கு நெருக்கடியான காலகட்டங்களில் உடனிருந்த ஆதரவாளர்களுக்கு சீட் தராமல் புறக்கணித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சசிகலா - ராமதாஸ் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவித்தனர்.

Sasikala ammk tamil nadu assembly election 2026

அதி​முகவை ஒருங்​கிணைக்கும் முயற்​சி​யில் ஈடு​பட்டு வந்த சசிகலா, இறு​தியாக அனைத்​திந்​திய புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்​றக் கழகம் என்ற புதிய கட்​சியை தொடங்​கி​னார். இந்தக் ​கட்​சி, வரும் சட்டசபை தேர்​தலில் பாமக நிறு​வனர் ராம​தாஸுடன் கூட்​டணி அமைத்து போட்​டி​யிடு​கிறது. சசிகலா இது​வரை 5 கட்​டங்​களாக 80 வேட்​பாளர்​களை அறி​வித்​துள்​ளார்.

தேர்தல் களத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தும் முயற்சியாக, அதிமுக போட்டியிடும் தொகுதிகளிலும், அமமுக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களிலும் சசிகலா கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இன்​றுடன் வேட்​பு மனு தாக்​கல் நிறைவடை​யும் நிலை​யில் நாளை (ஏப்​ரல் 7) பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கிறார். அனைத்​திந்​திய புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்​றக் கழக பொதுச்​செய​லா​ளர் சசிகலா, தனது ​கட்சி சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களை ஆதரித்து தொகுதி வாரியாக பிரச்​சா​ரம் மேற்கொள்​கிறார்.

அதன்​படி நாளை, திருப்​பரங்​குன்​றம், மதுரை மத்​தி, திரு​மங்​கலம், சோழ​வந்​தான், உசிலம்​பட்​டி, ஆண்​டிபட்டி தொகு​தி​களி​லும், 8 ஆம் தேதி போடி, நிலக்​கோட்​டை, திண்​டுக்​கல், மேலூர், தொகு​தி​களி​லும், 9 ஆம் தேதி சிவகங்​கை, மானாமதுரை, திருச்​சுழி, அருப்​புக்​கோட்​டை, சாத்​தூர் தொகு​தி​களி​லும், 10 ஆம் தேதி சிவ​காசி, ஸ்ரீவில்​லிப்​புத்​தூர், ராஜ​பாளை​யம், வாசுதேவநல்​லூர், சங்​கரன்​கோ​வில் ஆகிய தொகு​தி​களி​லும் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார் சசிகலா.

இந்நிலையில், சசிகலா கட்சிக்குள் சலசலப்புகள் எழுந்துள்ளன. சவாலான காலகட்டங்களில் தனக்கு ஆதரவாக நின்றவர்களை சசிகலா சீட் தராமல் புறக்கணித்துவிட்டார் என்று கட்சிக்குள் குமுறல்கள் வெடித்துள்ளன. இதனால் அதிருப்தி அடைந்த முன்னாள் அரசு கொறடா நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் மற்றும் பூவை கண்டன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து சமீபத்தில் இணைந்தவர்களுக்குத் தான் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், அதே சமயம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆதரவளித்து வந்த நீண்டகால விசுவாசிகள் ஓரங்கட்டப்படுவதாகவும் சசிகலா கட்சி நிர்வாகிகள் குமுறி வருகின்றனர்.

மேலும், சாதி அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சவாலான காலகட்டங்களில் தனக்கு ஆதரவாக நின்றவர்களை சசிகலா புறக்கணித்துவிட்டார் என்று கட்சியின்ர் கூறுகின்றனர். முன்னாள் அரசு கொறடா நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் மற்றும் பூவை கண்டன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகுவது பற்றி யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இது சசிகலா கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+