ஓ.பன்னீர்செல்வத்திடம் நலம் விசாரிக்கும் திட்டத்தில் சசிகலா! சந்திப்பு எப்போது? விறு விறு நகர்வுகள்!
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா இதற்கான முன்னெடுப்பு பணிகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வேளை ஓ.பன்னீர்செல்வம் -சசிகலா சந்திப்பு நடைபெற்றால் அதில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

ஓ.பன்னீர்செல்வம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்.ஜி.எம்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வம், கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்து நேற்று மாலை வீடு திரும்பினார். இதைத் தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வேண்டி அவரது ஆதரவாளர்கள் வீட்டிற்கு சென்ற வண்ணம் உள்ளனர். அதிமுக அலுவலகம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பால் மிகுந்த அப்செட்டில் இருந்து வருகிறாராம் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் அப்செட்
இதேபோல் வங்கிகள் விவகாரமும் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக பாதிக்கச் செய்துள்ளதாம். இந்தச் சூழலில் அடுத்தக் கட்டமாக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளில் அவரது டீம் இறங்கியுள்ளது. இதற்கு மத்தியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை, சசிகலா நேரில் சந்தித்து நலம் விசாரிக்கும் திட்டத்தில் இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

சசிகலா சந்திப்பு
அந்தச் சந்திப்பு விரைவில் நடைபெறக் கூடும் என்றும் அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் மனைவி காலமான போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறியவர் சசிகலா. இதனிடையே ஏற்கனவே பல முறை சசிகலாவை சந்தித்து பேசி வருபவர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா. இவர் தான் இப்படி ஒரு சந்திப்பு நிகழ வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறாராம்.
Recommended Video

எடப்பாடி தரப்பு
யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேசிக் கொள்ளட்டும் இதனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மிக உறுதியாக இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், சசிகலாவையும், ஓபிஎஸ் சையும் ஒரு பொருட்டாகவே இபிஎஸ் தரப்பினர் கருதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications