அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ட்விஸ்ட் கொடுத்த சசிகலா கட்சி.. முதுகுளத்தூர் தொகுதியில் தபால் வாக்குகளில் முன்னிலை
சென்னை: முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தபால் ஓட்டுகள் எண்ணிக்கையின் ஆரம்ப கட்டத்தில் சசிகலா கட்சியின் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார். முதுகுளத்தூர் தொகுதியில் அமைச்சர் ராஜ கண்ணப்பனை எதிர்த்து போட்டியிட்ட சசிகலா கட்சி வேட்பாளர் டாக்டர் ராம் குமார் முன்னிலை பெற்று இருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதுகுளத்தூர் தொகுதியில் அமைச்சர் ராஜ கண்ணப்பனை எதிர்த்து அதிமுக சார்பாக மலேசியா பாண்டி போட்டியிட்டார்.

சசிகலா தரப்பு வேட்பாளர் டாக்டர் ராம் குமார் இங்கு களமிறங்கியுள்ளார். தபால் வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் முதல் கட்டமாக சசிகலா கட்சியின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.
போட்டியிடும் வேட்பாளர்கள்
ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் - திமுக
ச. பாண்டி - அதிமுக
சந்திர பிரபா ஜெயபால் - நாம் தமிழர் கட்சி
மலர்விழி B - தமிழக வெற்றிக் கழகம்
மு. இருளாண்டி - நாடாளும் மக்கள் கட்சி
ஆ. சரவணக்குமார் - நாம் இந்தியர் கட்சி
கு. செந்தில்மள்ளர் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி
கு. செல்வராஜ் - புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி
ச. மலைச்செல்வம் - புதிய தமிழகம்
டாக்டர் ரா. ராம்குமார் - அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்












Click it and Unblock the Notifications