எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சசிகலா... ராமாவரம் தோட்டத்தில் மதிய உணவு... பரபரக்கும் 2-வது நாள்..!
சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு சென்ற சசிகலா, அங்கு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட சசிகலா, எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம்தோட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார்
அங்கு அதிமுக பொன்விழா ஆண்டு கொடியை ஏற்றும் அவர், காது கேளாத குழந்தைகளுடன் மதிய உணவு சாப்பிட இருக்கிறார்.

அதிமுக பொன்விழா
அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில், சசிகலா தனது அரசியல் இன்னிங்ஸ் 2.0 வை நேற்று தொடங்கிவிட்டார். ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு சென்றுள்ளார். அங்கு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செலுத்திய சசிகலா, அதிமுக பொன்விழா ஆண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

கல்வெட்டி பெயர்
அதைத் தொடர்ந்து அங்கு அதிமுக பொன்விழா ஆண்டு துவக்க நாள் நினைவாக அதிமுக கொடியை சசிகலா ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வின் நினைவாக அங்கு அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், கொடியை ஏற்றியவர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எனப் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த கல்வெட்டும் அதில் இடம் பெற்றிருக்கும் வாசகமும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வாழ்த்து முழக்கம்
சசிகலாவை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டிருந்ததால், அவர்களை நோக்கி வணக்கம் வைத்தபடியே செல்வதற்கு வசதியாக சசிகலாவின் கார் மெதுவாகவே நகர்ந்தது. அமமுக கொடிகளையும், அதிமுக கொடிகளையும் கைகளில் ஏந்தியபடி சசிகலாவை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முதலில் போகஸ் லைட்டை ஆன் செய்ய மறந்து விட்ட சசிகலாவின் ஓட்டுநர், பின்னர் திடீரென அந்த லைட்டை ஆன் செய்தார்.

பரபரப்பு
சென்னை தியாகராயர் நகர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்துக்கு புறப்பட்டு சென்ற சசிகலா அங்கு காது கேளாத குழந்தைகளுடன் மதிய உணவு சாப்பிட இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. முக்கியப் பிரமுகர்கள் பலர் ராமாவரம் தோட்டத்தில் சசிகலாவை சந்தித்துப் பேசவுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக பரபரக்கும் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துள்ள சசிகலா இனி அடுத்தடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications