சத்தியம் கருத்து கணிப்பு.. செங்கல்பட்டில் ஆதிக்கம் செலுத்தும் அதிமுக.. திமுகவிற்கு பின்னடைவு
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமாக அதிமுக 3 இடங்களிலும், திமுக 1 இடத்திலும் வெல்லும், இழுபறி 3 இடங்களில் காணப்படும் என்று சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. 2.54 லட்சம் பேரிடம் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரிய கருத்து கணிப்பு முடிவுகளை சத்தியம் கருத்து கணிப்புகள் வெளியிட்டுள்ளது.

இதில் செங்கல்பட்டு மாவட்டடத்தில் உள்ள 7 தொகுதிகளில் என்ன நிலவரம் என்று கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக 46%, திமுக 39% வாக்குகளை வெல்ல வாய்ப்பு உள்ளது
சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிமுக 36%, திமுக 38% வாக்குகளை வெல்ல வாய்ப்பு உள்ளது
பல்லாவரம் தொகுதியில் அதிமுக 40%, திமுக 36% வாக்குகளை வெல்ல வாய்ப்பு உள்ளது
தாம்பரம் தொகுதியில் அதிமுக 40%, திமுக 38% வாக்குகளை வெல்ல வாய்ப்பு உள்ளது
திருப்போரூர் தொகுதியில் விசிக 42%, பாமக 40% வாக்குகளை வெல்ல வாய்ப்பு உள்ளது
செய்யூர் தொகுதியில் அதிமுக 42%, விசிக 34% வாக்குகளை வெல்ல வாய்ப்பு உள்ளது
மதுராந்தங்கம் தொகுதியில் அதிமுக 39%, திமுக 39% வாக்குகளை வெல்ல வாய்ப்பு உள்ளது
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமாக அதிமுக 3, திமுக 1, இழுபறி 3 - சத்தியம் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications