Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

90 ஆயிரம் கோடி.. கடன் வாங்கும் சவுதி அரேபியா அரசு.. சல்மான் எடுத்த மிகப்பெரிய முடிவு.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுதி அரேபியா அரசு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பொருளாதார திட்டங்களுக்காக, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி திரட்டும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 10 பில்லியன் டாலர் வரை கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் அந்நாடு ஈடுபட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட 90 ஆயிரம் கோடி ஆகும்.

சவுதி நிதி அமைச்சகம், பெரிய வால் ஸ்ட்ரீட் வங்கிகள் உட்பட பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்ன மாதிரியான வட்டி கொடுக்க வேண்டும், என்ன கடன் முறையில் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், இது குறித்த இறுதி முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை.

saudi arabia mohammed salman

கேட்ட கடன் கிடைக்காத பட்சத்தில், விரும்பிய விலையில் கடன் கிடைக்காத பட்சத்திலோ அல்லது சந்தை நிலைமைகள் சாதகமாக இல்லாத பட்சத்திலோ இந்த ஒப்பந்தத்தில் இருந்து சவுதி அரேபியா பின்வாங்கக்கூடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சவுதி அரேபியா கடன் வாங்கும் நாடு அல்ல

பொதுவாக, சவுதி அரேபியா கடன் வாங்கும் நாடு கிடையாது. சவுதி அரேபியா பத்திர விற்பனையின் மூலமே அதிக நிதியை திரட்டி வருகிறது. இந்த கடன்களை முழுக்க முழுக்க வளர்ச்சி திட்டங்களுக்காக மட்டும் சவுதி பயன்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 20 பில்லியன் டாலர் கடனை அந்நாடு திரட்டியுள்ளது. 2017-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கடன் டார்கெட்டை அந்த நாடு எட்டி உள்ளது.

கடன் டார்கெட்

சவுதி நாடு பெறக்கூடிய இது போன்ற கடன்கள் ஒப்பீட்டளவில் அரிதானவை. எனினும், 2016-ஆம் ஆண்டு முதல் 10 பில்லியன் டாலர் அல்லது அதற்கும் அதிகமான மதிப்புள்ள இரண்டு பெரிய கடன் ஒப்பந்தங்களை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டு உள்ளது. இனி வரும் நாட்களில் இதேபோல் அதிக கடன்களை சவுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்நாட்டு நிதி அமைச்சகம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இருப்பினும், அரசாங்கத்தின் நிதி ஆதாரங்களை பல்வகைப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்று நிதி விருப்பங்களை ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் முன்னர் கூறியுள்ளனர். சவுதி அரேபியா அரசு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பொருளாதார திட்டங்களுக்காக, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி திரட்டும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சவுதியின் வருவாய் குறைகிறது

சென்ற வாரம் சவுதி அரேபியா தனது 2025 பட்ஜெட்டை 65 பில்லியன் டாலராக நிர்ணயித்தது. இது முந்தைய கணிப்பை விட இருமடங்கு அதிகம். அரசாங்கம் செலவினங்களை அதிகரிப்பதாலும், வருவாய் குறைவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மறுசீரமைப்பிற்கு முன், ரியாத் இந்த ஆண்டு சுமார் 37 பில்லியன் டாலர் கடன் வாங்க திட்டமிட்டிருந்தது. இதில் பெரும்பகுதி மூலதன சந்தைகள் மூலமாகவும், சுமார் 30% தனியார் வழிகள் மூலமாகவும் திரட்டப்பட இருந்தது.

எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் அதிக உள்நாட்டுச் செலவினங்கள் காரணமாக சவால்கள் நிலவினாலும், சவுதி அரேபியாவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் பெரிய ஒப்பந்தங்களை முன்னெடுத்து வருகின்றன. எதிர்வரும் காலங்களில், கச்சா எண்ணையை மட்டும் நம்பி இல்லாமல், மற்ற வழிகளிலும் வருவாய் ஈட்டப்படும் என்று அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+