இப்படியே லீவு விட்டுகிட்டே இருங்க.. எங்கம்மா என்ன நல்லா வெச்சு செய்து... புலம்பும் சிறுமி வீடியோ!
சென்னை: பள்ளிகள் இயங்காமல் தொடர்ந்து விடுமுறை விட்டு கொண்டே இருப்பதால், மாணவர்களின் கல்வித்திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி ஒருவர் பள்ளிக்கு தொடர்ந்து விடுமுறை விடுவதால் தாங்கள் பாதிக்கப்பட்டதை விடியோவில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கல்வி கற்க முடியாத நிலையில் மாணவ மாணவிகள் தவிக்கிறார்கள். வீடுகளில் ஜாலியாக இருந்த காலம் போய், எப்போது பள்ளிகள் இயங்கும் என்று ஏங்கும் நிலைக்கு வந்துவிட்டது வந்துவிட்டார்கள்.
வீடுகளில் சும்மாவே இருப்பதால் தங்களது பெற்றோர்களுக்கு உதவியாக சின்ன சிறிய வேலைகளை அவர்களது குழந்தைகள் செய்து வருகிறார்கள். பாத்திரம் கழுவுவது , வீடு கூட்டுவது, சமையலுக்கு உதவுவது , சிலநேரங்களில் சமையல் செய்வது வரை நீள்கிறது.
சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாத்திரம் கழுவுவதை அதிகமாக செய்ய வைப்பதாக தெரிகிறது . இதனால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை புலம்பி தள்ளும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விடுகிறது. அந்த சிறுமிக்கு 7 வயது இருக்கும் என்று தெரிகிறது. பெயர் தெரியவில்லை ஊர் தெரியவில்லை.
'விமானங்களை பாகிஸ்தானுக்கு கடத்த போறேன்' .. ம.பி.யை கலங்கடித்த இளைஞர்.. அலேக்கா தூக்கிய போலீசார்!
அவர் தனது வீடியோ பதிவில், இப்படியே நல்லா லீவு விட்டுக்கிட்டு இருங்க.. நான் படிக்கிறனோ இல்லையோ, நான் பாத்திரம் கழுவுவதை நல்லா கற்றுக்கொண்டேன். என் அம்மா என்னை நல்லா வச்சு செய்யுது என்று புலம்புகிறார். இந்த வீடியோவை முற்றிலும் ஜாலியாகவே பதிவு செய்துள்ளார்கள் என்பது சிறுமியின் முகபாவனைகளில் தெரிகிறது. ஆனால் அந்த குழந்தை சொல்வது போல் தொடர்ந்து விடுமுறை விட்டு கொண்டே இருந்தாள் குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.