திடீரென வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்ற தலைமை செயலக ஊழியர்கள்
தலைமை செயலக ஊழியர்கள் நாளை நடத்தவிருந்த ஸ்டிரைக் திரும்ப பெறப்பட்டது.
Recommended Video

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக நாளை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தலைமை செயலக ஊழியர்கள் திடீரென இன்று தங்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இதற்கு ஒரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியர்களின் கோரிக்கைக்கு, நிதி பற்றாக்குறை என்ற காரணத்தை முன்வைத்து, அவற்றினை ஏற்க அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் அரசின் எச்சரிக்கையையும் மீறி, நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் இன்று கிட்டத்தட்ட முறியடிக்கப்பட்டு விட்டது.

உணவு இடைவேளை
முன்னதாக தலைமை செயலக ஊழியர்களும் தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற தலைமை செயலக ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த வெள்ளிக்கிழமை தலைமை செயலகத்தில் உணவு இடைவேளையின்போது ஒன்றாக கூடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அரசுக்கு அதிர்ச்சி
பிறகு சனி, ஞாயிறு லீவு முடிந்து நேற்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் கையெழுத்து போட்டுவிட்டு, வேலைக்கு போகாமல் திரும்பவும், தலைமை செயலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்கள் 30ம் தேதி அதாவது நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தலைமைச் செயலக ஊழியர்கள் சங்க தலைவர் அறிவித்தார். இது அரசு தரப்புக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

5 பேர் சஸ்பெண்ட்
இதனிடையே, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற தலைமை செயலக ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழக அரசின் உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

திடீர் வாபஸ்
இந்நிலையில், தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் நாளை அறிவித்திருந்த ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக திடீரென அறிவித்துள்ளது. தலைமை செயலக ஊழியர்கள் சங்க தலைவரின் இந்த முடிவுக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications