திடீரென வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்ற தலைமை செயலக ஊழியர்கள்
தலைமை செயலக ஊழியர்கள் நாளை நடத்தவிருந்த ஸ்டிரைக் திரும்ப பெறப்பட்டது.
Recommended Video

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக நாளை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தலைமை செயலக ஊழியர்கள் திடீரென இன்று தங்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இதற்கு ஒரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியர்களின் கோரிக்கைக்கு, நிதி பற்றாக்குறை என்ற காரணத்தை முன்வைத்து, அவற்றினை ஏற்க அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் அரசின் எச்சரிக்கையையும் மீறி, நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் இன்று கிட்டத்தட்ட முறியடிக்கப்பட்டு விட்டது.

உணவு இடைவேளை
முன்னதாக தலைமை செயலக ஊழியர்களும் தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற தலைமை செயலக ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த வெள்ளிக்கிழமை தலைமை செயலகத்தில் உணவு இடைவேளையின்போது ஒன்றாக கூடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அரசுக்கு அதிர்ச்சி
பிறகு சனி, ஞாயிறு லீவு முடிந்து நேற்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் கையெழுத்து போட்டுவிட்டு, வேலைக்கு போகாமல் திரும்பவும், தலைமை செயலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்கள் 30ம் தேதி அதாவது நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தலைமைச் செயலக ஊழியர்கள் சங்க தலைவர் அறிவித்தார். இது அரசு தரப்புக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

5 பேர் சஸ்பெண்ட்
இதனிடையே, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற தலைமை செயலக ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழக அரசின் உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

திடீர் வாபஸ்
இந்நிலையில், தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் நாளை அறிவித்திருந்த ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக திடீரென அறிவித்துள்ளது. தலைமை செயலக ஊழியர்கள் சங்க தலைவரின் இந்த முடிவுக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications