நான் கர்நாடகா போயி.. அண்ணே! OBC விரிவாக்கம் அது இல்ல - மேடையில் தவறான விளக்கம் கொடுத்தாரா சீமான்?
சென்னை: ஓபிசி என்பது மத்திய அரசால் வகைப்படுப்பட்டு இருக்கும் இடஒதுக்கீடு பிரிவாக உள்ள நிலையில், உசிலம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதற்கு பிழையான விரிவாக்கத்தை கொடுத்து இருப்பதுடன், அதில் தமிழர்களை இணைக்க கர்நாடக அரசிடம் வலியுறுத்துவேன் என்று தெரிவித்து இருக்கிறார்.
அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழா மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. இதில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "70 வயது தன்னுடைய சொத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக திருமணம் செய்துகொண்ட பெரியார் புரட்சியாளராம். அதே நேரம் தனது சொத்துக்களை வாழ்வின் இறுதியில் ஏழைகளுக்கு பகிர்ந்து வழங்கிய முத்துராமலிங்க தேவர் சாதியாளரா? முத்துராமலிங்க தேவர்தான் புரட்சியாளர்.

பெரியார் என்ன பீகாரில் பிறந்தாரா? அங்கி சாதிவாரி கணக்கெடுப்பை நிதீஷ் குமார் நடத்துகிறாரே? அந்த கணக்கெடுப்பை நடத்தினால் இத்தனை ஆண்டுகள் நீங்கள் ஆக்கிரமித்தது எல்லாம் அம்பலமாகிவிடுமே. நான் ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவேன். மத்திய அரசு எங்கு இருக்கிறது என்று கேட்பேன். ஏய்.. போப்பா.. அங்கிட்டு.. என்பேன். நான் எண்ணுவேன்.
நான் இங்கு இருக்கிற ரெட்டியாருக்கு கொடுப்பேன். தெலுங்கு செட்டியாருக்கு கொடுப்பேன். கன்னட செட்டியாருக்கு கொடுப்பேன். நாயுடுவுக்கு கொடுப்பேன். எல்லோருக்கும் கொடுப்பேன். ஆனால், இங்கே பாரு.. நான் என்ன சொல்வேன் என்றால்.. ஆந்திராவுக்கு போவேன். கர்நாடகாவுக்கு போவேன். இங்கு இருக்கிற கன்னடர்களுக்கு நான் கொடுத்து இருக்கிறேன்.
இங்கே ஒன்றே கால் தமிழன் இருக்கிறான். அவனை நீங்கள் ஓபிசியில் வைத்து உள்ளீர்கள். Out of Backward என்று வைத்து உள்ளார்கள். அது இல்லாமல் அது இல்லாமல் என்னையும் சேர்த்துக்கொண்டு நான் அங்கு இடஒதுக்கீடு வழங்கியதைபோல் நீயும் கொடு என்று சொல்வேன்." என்றார். இடஒதுக்கீட்டிற்காக மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட பிரிவுகளில் ஒன்றுதான் ஓபிசி.
ஓபிசி என்றால் Out of Backward என்று சீமான் உசிலம்பட்டி கூட்டத்தில் பேசி உள்ளார். ஆனால், அதன் சரியான விரிவாக்கம் என்பது Other Backward class என்பதே. அதாவது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்று தமிழில் பொருள். ஆனால், இதனை பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கு வெளியில் உள்ளவர்கள் என்று தவறுதலாக புரிந்துகொண்ட சீமான், கர்நாடகாவில் தமிழர்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்துகொள்ளுமாறு கேட்பேன் என்று பேசி உள்ளார்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications