வழக்கமான உடல் பரிசோதனைதான்.. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சீமான்
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சீமானின் உடல் நிலைக் குறித்து அறிக்கை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.. இதனிடையே சீமானின் உடல்நலம் பாதித்த தகவல்களால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, வழக்கமான உடல் பரிசோதனை பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டார் என்றும் தற்போது வீடு திரும்பிவிட்டார் என்றும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications