ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும்! செல்வப்பெருந்தகை போர்க்குரல்!
சென்னை: கோரமண்டல் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை போர்க்குரல் உயர்த்தியுள்ளார்.
மேலும், விபத்துக்கு காரணமாக அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசா மாநிலம், பாலோசோர் மாவட்டம், பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே பயங்கர விபத்திற்குள்ளாகி 230-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உடனடியாக ஒரிசா மாநில முதலமைச்சரை தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்திருக்கிறார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட ஒரிசாவிற்கு அமைச்சர் பெருமக்கள் அடங்கிய ஒரு குழுவையும் சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளார். நிவாரண உதவித் தொகையும் அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களை தமிழ்நாடு அழைத்து வர சிறப்பு ரயில் இயக்கப்படுமென கூறியுள்ளார். இவ்வளவு விரிவான ஏற்பாடு செய்துள்ளது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது.
விபத்தில் இறந்தவர்களையும் மற்றும் காயம் அடைந்தவர்களையும் மீட்டு உடனடியாக அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து சிறப்புச் சிகிச்சை அளிக்கவேண்டும். மேலும், அவர்களுக்கு நிவாரண உதவி விரைந்து கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
விபத்துக்கான காரணத்தை உடனடியாக ஆய்வு செய்து எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்க ஒன்றிய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். விண்வெளியில் சாதனை செய்யும் அளவிற்கு அறிவியல் துறையில் முன்னேறிய நம் நாட்டில் இதுபோன்று உயிர்பலி ஆகும் கோரவிபத்துக்கள் அதிகாரிகளின் கவனக்குறைவாலும், அலட்சியத்தினாலுமே ஏற்படுகிறது.
விபத்துக்கு காரணமாக அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் விபத்திற்கு பொறுப்பேற்று ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டுக் கேட்டுக் கொள்கிறேன்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications