தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அழிக்க முயற்சி! மத்திய பாஜக அரசு மீது செல்வப்பெருந்தகை சரமாரி புகார்!
சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து, சைபர் பாதுகாப்பு பிரிவுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்ட நோக்கம் பற்றியும் அதன் பின்னணி குறித்தும் மேலும் அவர் கூறியதாவது;

''காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த அடுத்த வருடமே அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உருவாக்க வேண்டுமென்று தான் 'தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005' கொண்டு வந்தது. பா.ஜ.க.வின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் தனக்கு தலைவலியாக இருந்த அனைத்து அமைப்புகளையும் தனது பெரும்பான்மை பலத்தின் மூலம் பலவீனப்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தகவல் ஆணையமும் தப்பவில்லை.''
'''தகவல் அறியும் உரிமைச் சட்டம்' மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்றது. தலைமை தகவல் ஆணையர்தான் இந்தச் சட்டத்தை பாதுகாக்கும் இறுதியானவர். ஆனால், அத்தகையவரின் பதவி காலம் மற்றும் சம்பளம் குறித்து முதன்முதலில்; சட்டத்திருத்தம் செய்து, மிகப்பெரிய விமர்சனத்தை எதிர்கொண்டது ஒன்றிய பா.ஜ.க.அரசு. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை, வருமான வரி, விசாரணை பிரிவு உள்ளிட்ட 26 பிரிவுகளுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்து திருத்தம் மேற்கொண்டது.''

''தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து, தற்போது சைபர் பாதுகாப்பு பிரிவுக்கும் விலக்கு அளித்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. மக்களின் கேள்வி கேட்கும் திறனை ஊக்குவிக்கும் சட்டங்கள் மூலம் தனது அரசின் தவறான நோக்கங்கள் அம்பலப்பட்டுவிடும் என்பதற்கு பயந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச்; செய்கிறது ஒன்றிய அரசு.''
''ஊழலற்ற ஆட்சி என்று மேடை தோறும் பொய்யாக, வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி, இந்த சட்டத்தை பலப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக, அவற்றை அழிக்க பா.ஜ.க. அரசு நினைக்கின்றது. நாட்டின் மக்கள் பா.ஜ.க.அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது நிதர்சனமான உண்மை.''
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications