அன்புமணிக்குப் பிடிக்கவே இல்லையாம்.. கட்டாயப்படுத்தி எம்பி ஆக்கிய பாமக!
Recommended Video
சென்னை: ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு வருவதில் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு சுத்தமாக விருப்பமே இல்லையாம். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதால்தான் ஒத்துக் கொண்டாராம்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் திமுக, அதிமுக சார்பில் தலா 2 வேட்பாளர்களும், மதிமுக, பாமக சார்பில் தலா 1 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. இந்தத் தோல்வி அன்புமணிக்கு மனதளவில் மிகுந்த கவலையை அளித்துள்ளது.

அன்புமணியின் யோசனை
கூட்டணி விவகாரத்தில் அவசரப்பட்டதால் ஏற்பட்ட விளைவோ என்கிற ரீதியில் அன்புமணி யோசனை செய்தாராம். இதனிடையே கூட்டணி ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு சீட் அதிமுக ஒதுக்கியதை அடுத்து, பாமக சார்பில் அன்புமணி போட்டியிடுவார் எனக் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு வெளியிட்டார்.

விருப்பமே இல்லை
ஆனால் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அன்புமணிக்கு விருப்பமே இல்லையாம். அதிமுக கொடுத்த இடத்தில், அதிமுக எம்.எல்.ஏக்கள் தயவில் எம்.பி.யானால் நாளை அவர்களை பற்றி எப்படி விமர்சித்து பேச முடியும் என நினைத்தாராம்.

செம அப்செட்
மேலும், தேர்தல் முடிவு வெளியானதில் இருந்தே அப்செட் மூடில் இருக்கும் அன்புமணியை கட்சியினர் தான் நிர்பந்தித்து, வலியுறுத்தி ராஜ்யசபா எம்.பி.யாக வலியுறுத்தினார்களாம்.

ஏகே மூர்த்தியும் ஜிகே மணியும்
பாமக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேறு யாருக்காவது வாய்ப்பு தரும் திட்டத்தில் இருந்த அன்புமணியை, ஏ.கே.மூர்த்தி, ஜி.கே.மணி, உள்ளிடோர் வற்புறுத்தி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளார்கள். இப்படித்தான் அன்புமணி வேட்பாளரானாராம்.

கட்சியை வளர்க்கலாம்
இருப்பினும் தற்போது கிடைத்துள்ள இந்த எம்பி வாய்ப்பின் மூலமாக தர்மபுரிக்கு மட்டுமல்லாமல் பாமகவின் வாக்கு வங்கி உள்ள பகுதிகளிலும் சிறப்பாக செயல்பட்டு இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அன்புமணி உறுதிபூண்டுள்ளாராம். கட்சி வளர்ச்சிக்கு இந்த எம்பி பதவி உதவும் என்ற நம்பிக்கையும் அவருக்கு வந்துள்ளதாம்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications