30 நிமிடத்துக்கு மேல் நிற்கவே முடியாது! செந்தில் பாலாஜி எப்படி தப்பி செல்வார்? கபில் சிபல் வாதம்
சென்னை: ‛‛தற்போதைய சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜியால் 30 நிமடத்துக்கு மேல் நிற்கவே முடியாது. நிலைமை இப்படி இருக்கும்போது அவர் எப்படி தப்பித்து செல்வார்?'' என அவரது ஜாமீன் கோரும் வழக்கில் அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் வாதாடினார்
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை என்பது இன்று நீதிபதி அல்லி முன்பு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் என்ஆர் இளங்கோ வாதாடினார். அமலாக்கத்துறை சார்பிலும் வழக்கறிஞர் வாதாடினர். கபில் சிபல் ஜாமீன் வழங்க கோரிய நிலையில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மீதான தீர்ப்பை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். முன்னதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கில் கபில் சிபல் பல்வேறு முக்கிய அம்சங்களை பரபரப்பாக எடுத்து வைத்தார். அமலாக்கத்துறை விசாரணையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ‛நீங்கள் ஏன் பாஜகவில் சேரக்கூடாது' என கேட்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை காரணம் காட்டியும், அவர் எங்கும் தப்பித்து செல்லமாட்டார் எனவும் கபில் சிபல் வாதிட்டார். இதுதொடர்பாக கபில் சிபல் நீதிமன்றத்தில், ‛‛செந்தில் பாலாஜியால் தற்போது 30 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து நிற்கவே முடியாது. பிறகு எப்படி அவர் தப்பித்து செல்வார்'' என வாதிட்டார்.
அதோடு, ‛‛தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கிறார். இதனால் அவரால் தப்பித்து செல்ல முடியாது. அதோடு அவர் விசாரணையை எதிர்கொள்வார். மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் தான் உள்ளது என்பதால் ஆதாரங்களையும் அவரால் அழிக்க முடியாது'' என்றார்.
இதுதவிர ‛‛இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டு 9 ஆண்டுக்கு முன்பானது. இந்த 9 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்? மேலும் தற்போது வரை செந்தில் பாலாஜியின் வருமான வரி தாக்கல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதோடு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை. அதோடு செந்தில் பாலாஜியிடம் பணம் கொடுத்ததாக எங்கும் கூறப்படவில்லை. கார்த்திகேயன், சண்முகம் தான் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் புகார் கூறியவர்கள் யாரும் சாட்சிகளாக சேர்க்கப்படவில்லை. இதனால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை'' என பரபரப்பாக வாதிட்டார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications