Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜவ்வ்வ்வா இழுக்குதே.. செந்தில் பாலாஜிக்கு பெரிய சோதனை.. அப்படின்னா ஜாமீன் கிடைக்காதா? மீண்டும் காவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின், நீதிமன்ற காவலை 26வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி, பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார்.

Senthil Balaji Case Hearing today in High Court and DMK Senthil Balaji custody ends today will he get bail before election

நேரில் ஆஜர்: செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட்டில் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர்... மொத்தம் 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

அதேபோல, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்கள் ஒவ்வொரு முறையும் முடிவடையும் தருவாயில், புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார்.

எதிர்பார்ப்பு: நேற்று முன்தினம், சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு மீண்டும் காணொளிக் காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.. அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 13ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.. செந்தில் பாலாஜிக்கு 25-வது முறையாக இந்த நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்தது.

இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.. அப்போது, நீதிமன்ற காவலை வருகிற மார்ச் 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.. இதன்மூலம் 26வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற உத்தரவில், அமலாக்கத் துறையின் வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

கோரிக்கை: செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற உத்தரவில், அமலாக்கத் துறையின் வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டிலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றைய தினம் மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெருகும் ஆர்வம்: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் எப்போது கிடைக்கும் என்ற ஆர்வம் அவரது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒருபக்கம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தும், மற்றொருபக்கம், நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டும் வருவதால், நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம் செந்தில் பாலாஜி.

தேர்தலும் நெருங்கி கொண்டிருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற ஆர்வம் அவரது ஆதரவாளர்களிடம் தினம் தினம் பெருகி கொண்டிருக்கிறது!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+