அதானி துறைமுகத்தில் ஆபத்தான கதிரியக்க பொருட்கள்.. சிக்கிய பாகிஸ்தான்-சீனா கன்டெய்னர்
டெல்லி: குஜராத்தில் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில், ஆபத்தான கதிரியக்க பொருட்கள் கொண்டு சென்ற கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (APSEZ) வெளியிட்ட அறிக்கையின்படி, பறிமுதல் செய்யப்பட்ட கொள்கலன்கள் பாகிஸ்தானில் உள்ள கராச்சியிலிருந்து சீனாவின் ஷாங்காய்க்கு அனுப்பப்பட்டன என்றும், அவை முத்ரா துறைமுகத்திற்கு அனுப்பப்படவில்லை. இந்த சரக்குகள் அபாயமற்ற வகையாக பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், சோதனை செய்து பார்த்தபோது இது அபாயகரமான பொருள் என தெரியவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கொள்கலன்களில் கதிரியக்கப் பொருட்கள் இருப்பதை சுட்டிக்காட்டும் (அபாயகரமான வகை 7) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சீனாவிற்கு
நவம்பர் 18 அன்று முந்த்ரா துறைமுகத்தில் ஒரு வெளிநாட்டுக் கப்பலில் இருந்து சுங்க மற்றும் DRI இன் கூட்டுக் குழு பல கொள்கலன்களைக் கைப்பற்றியது. இந்த கொள்கலன்கள் ஆபத்தான பொருட்களை கொண்டு சென்றது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை. சீனாவின் ஷாங்காய்க்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த கொள்கலன்களை முந்த்ரா துறைமுகத்தில் பரிசோதனைக்காக இறக்கி வைத்தோம்.

கராய்சி
"... கொள்கலன்கள் முந்த்ரா துறைமுகத்திற்கோ அல்லது இந்தியாவின் வேறு எந்த துறைமுகத்திற்கோ அனுப்பப்படவில்லை, ஆனால் பாகிஸ்தானில் உள்ள கராச்சியிலிருந்து சீனாவின் ஷாங்காய்க்கு செல்லும் வழியில் அரசு அதிகாரிகள் அவற்றை மேலும் ஆய்வுக்காக முந்த்ரா துறைமுகத்தில் இறக்கியுள்ளனர்" என்று அதானி போர்ட்ஸ் அறிவித்துள்ளது.

அதானி குழுமம் விளக்கம்
"நாங்கள் அவர்களின் செயல்பாட்டுக்கு வணக்கம் செலுத்துகிறோம், இந்தியாவைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் எந்தவொரு செயலுக்கும் தொடர்ந்து முழுமையாக உதவுவோம். அதானி குழுமம் தேசிய பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது மற்றும் அதை எந்த வகையிலும் சமரசம் செய்ய அனுமதிக்காது," இவ்வாறு அதானி போர்ட் அறிவித்துள்ளது.

சர்ச்சை
சில மாதங்கள் முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்து விஜயவாடாவுக்கு கடத்தி வரப்பட்ட 3 டன் எடையுள்ள, ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளை குஜராத்தில் அதானிக்கு சொந்தமான இதே துறைமுகத்தில்தான் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதானி துறைமுகம்தான், தற்போது இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications