அதானி துறைமுகத்தில் ஆபத்தான கதிரியக்க பொருட்கள்.. சிக்கிய பாகிஸ்தான்-சீனா கன்டெய்னர்
டெல்லி: குஜராத்தில் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில், ஆபத்தான கதிரியக்க பொருட்கள் கொண்டு சென்ற கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (APSEZ) வெளியிட்ட அறிக்கையின்படி, பறிமுதல் செய்யப்பட்ட கொள்கலன்கள் பாகிஸ்தானில் உள்ள கராச்சியிலிருந்து சீனாவின் ஷாங்காய்க்கு அனுப்பப்பட்டன என்றும், அவை முத்ரா துறைமுகத்திற்கு அனுப்பப்படவில்லை. இந்த சரக்குகள் அபாயமற்ற வகையாக பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், சோதனை செய்து பார்த்தபோது இது அபாயகரமான பொருள் என தெரியவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கொள்கலன்களில் கதிரியக்கப் பொருட்கள் இருப்பதை சுட்டிக்காட்டும் (அபாயகரமான வகை 7) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சீனாவிற்கு
நவம்பர் 18 அன்று முந்த்ரா துறைமுகத்தில் ஒரு வெளிநாட்டுக் கப்பலில் இருந்து சுங்க மற்றும் DRI இன் கூட்டுக் குழு பல கொள்கலன்களைக் கைப்பற்றியது. இந்த கொள்கலன்கள் ஆபத்தான பொருட்களை கொண்டு சென்றது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை. சீனாவின் ஷாங்காய்க்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த கொள்கலன்களை முந்த்ரா துறைமுகத்தில் பரிசோதனைக்காக இறக்கி வைத்தோம்.

கராய்சி
"... கொள்கலன்கள் முந்த்ரா துறைமுகத்திற்கோ அல்லது இந்தியாவின் வேறு எந்த துறைமுகத்திற்கோ அனுப்பப்படவில்லை, ஆனால் பாகிஸ்தானில் உள்ள கராச்சியிலிருந்து சீனாவின் ஷாங்காய்க்கு செல்லும் வழியில் அரசு அதிகாரிகள் அவற்றை மேலும் ஆய்வுக்காக முந்த்ரா துறைமுகத்தில் இறக்கியுள்ளனர்" என்று அதானி போர்ட்ஸ் அறிவித்துள்ளது.

அதானி குழுமம் விளக்கம்
"நாங்கள் அவர்களின் செயல்பாட்டுக்கு வணக்கம் செலுத்துகிறோம், இந்தியாவைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் எந்தவொரு செயலுக்கும் தொடர்ந்து முழுமையாக உதவுவோம். அதானி குழுமம் தேசிய பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது மற்றும் அதை எந்த வகையிலும் சமரசம் செய்ய அனுமதிக்காது," இவ்வாறு அதானி போர்ட் அறிவித்துள்ளது.

சர்ச்சை
சில மாதங்கள் முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்து விஜயவாடாவுக்கு கடத்தி வரப்பட்ட 3 டன் எடையுள்ள, ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளை குஜராத்தில் அதானிக்கு சொந்தமான இதே துறைமுகத்தில்தான் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதானி துறைமுகம்தான், தற்போது இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications