எஸ்ஐ தேர்வு ரொம்ப டஃப்.. மிஸ்ஸான தமிழ் கேள்விகள்! தமிழ்வழி மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்!கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நேற்று முன்தினம் 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் வினாத்தாள் மாற்றம் கடுமையாக இருந்ததாகவும், கேள்வித்தாளில் தமிழ் கேள்விகள் முழுமையாக நீக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையில் தாலுகா மற்றும் ஆயுதப்படையில் காலியாக உள்ள 1,299 காவல் சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ) பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் பெற வேண்டும். இல்லையென்றால் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்படாது.

tnsurb SI Exam Annamalai

எஸ்ஐ தேர்வு

இரண்டாம் பகுதியில் பொது அறிவு (45) மற்றும் உளவியல் (25) சார்ந்த வினாக்கள் கேட்கப்பட்டது. இது 70 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வாக நடைபெற்றது. தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வினாத்தாள் திட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் தேர்வர்களை கடினமாக உணர வைத்ததாக கூறப்படுகிறது. உளவியல் பகுதியில் தமிழ் வினாக்கள் இடம்பெறவில்லை. மேலும் பாடத்தலைப்புகள் வாரியான வினாக்களின் எண்ணிக்கையிலும் மாற்றம் இருந்ததாக கூறப்படுகிறது.

எஸ்ஐ தேர்வு சர்ச்சை

இந்நிலையில், சார்பு ஆய்வாளர் (SI) முதன்மைத் தேர்வுக்கான கேள்வித் தாளில், தமிழ் கேள்விகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," தமிழக சீருடை பணியாளர் வாரியம் 21.12.2025 அன்று நடத்திய சார்பு ஆய்வாளர் (SI) முதன்மைத் தேர்வுக்கான கேள்வித் தாளில், தமிழ் கேள்விகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பொதுவாக, சீருடை வாரியம் நடத்தும் இந்த முதன்மைத் தேர்வு, பகுதி 1 - 80 பொது அறிவு கேள்விகளும், பகுதி 2 - 60 கேள்விகளில், மாணவர்களின் மொழி வாயிலான தகவல் பரிமாற்றத்தைச் சோதனை செய்வதற்காக, 10 கேள்விகள் தமிழிலும், 10 கேள்விகள் ஆங்கிலத்திலும் இருப்பது வழக்கமான நடைமுறை. மீதமுள்ள 40 கேள்விகள், உளவியல் தொடர்பான கேள்விகளாக அமைந்திருக்கும்.

எஸ்ஐ தேர்வு தமிழ் கேள்விகள்

ஆனால் இந்த ஆண்டு, எந்த முன்னறிவிப்புமின்றி தமிழ் கேள்விகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. 10 ஆங்கிலக் கேள்விகள் மட்டும் இடம் பெற்றிருக்கின்றன. அரசு வெளியிட்ட தேர்வு நடைமுறைகள் மற்றும், மாதிரி வினாத்தாளை மீறி, முன்னறிவிப்பின்றி தேர்வு நாளில் விதிகளை மாற்றுவது, அரசுத் தேர்வுகளின் நம்பகத்தன்மையையே சிதைத்திருக்கிறது.

அண்ணாமலை கண்டனம்

தமிழ் மொழியின் பெயரால் நாடகமாடும் திமுக அரசு, சார்பு ஆய்வாளர் தேர்வில் தமிழை புறக்கணித்துள்ளது, திமுக அரசின் போலி தமிழ்ப் பற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இது தமிழ் வழி மாணவர்களுக்கு திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி. தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க, இந்தத் தேர்வில் அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+