உச்சம் அடைந்த விஜயின் WFH அரசியல்.. கடுப்பான தவெக தலைகள்.. இப்படி நடக்கும்னு நினைக்கலையே?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கித் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சிக்குள் ஒரு மெல்லிய அதிருப்தி அலை வீசத் தொடங்கியுள்ளது. ரசிகர்கள், தொண்டர்களின் பலத்துடன் கட்சி தொடங்கப்பட்டாலும், கட்சியின் தலைவர் விஜய் வீட்டை விட்டு வெளியே வர தயங்குவது, ஊடகங்களைச் சந்திக்கத் தயங்குவது சொந்தக் கட்சி நிர்வாகிகளையே சோர்வடையச் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

அரசியல் களமும் ஆளுமைகளின் உழைப்பும்
தமிழக அரசியலில் தற்போது அனல் பறக்கும் சூழல் நிலவுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் தினசரி ஊடகங்களைச் சந்தித்து, மக்கள் பிரச்னைகளுக்குப் பதிலளித்து வருகின்றனர். பல்வேறு ரவுண்டு டேபிள் மீட்டிங்குகளுக்கு செல்கிறார்கள்.
தேசிய அளவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தன் மாநில மக்களுக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று, தனது வாதங்களை முன்வைக்க ஆறு மணி நேரம் காத்திருந்து போராடுகிறார். ஏன், ஊடகங்களைச் சந்திப்பதில்லை என்று விமர்சனத்திற்கு உள்ளாகும் பிரதமர் நரேந்திர மோடி கூட, தேர்தல் என்று வந்துவிட்டால் வரிசையாகப் பேட்டிகளை வழங்கித் தனது திட்டங்களை விளக்குகிறார்.
ஆனால், ஒரு மாநிலத்தை ஆள வேண்டும் என்ற லட்சியத்துடன் கட்சி தொடங்கியுள்ள விஜய், இதில் ஒரு சதவீத முயற்சியைக் கூட எடுக்கத் தயங்குவது ஏன் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். விஜய் இது போல பேட்டி கொடுக்கவில்லை. விஜய் நேரடியாக வீட்டில் அழைத்து பேசுகிறார். அங்கும் கூட பேட்டி தரவில்லை. ஏன் ஸ்கிரிப்ட் பேட்டி கூட கொடுக்கவில்லை.
கடுப்பான தவெக நிர்வாகிகள்
இதன் காரணமாக விஜய் மீது தவெக நிர்வாகிகள் கடுமையாக புகார்களை வைக்கிறார்கள்.
அணுக முடியாத தலைமை: இரண்டாம் கட்டத் தலைவர்களோ அல்லது அடிமட்டத் தொண்டர்களோ தலைவரைச் சந்திப்பது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
பதிலளிக்க முடியாத சூழல்: எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கும், மக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்லத் தெரியாமல் தொண்டர்கள் திணறி வருகின்றனர். விஜய் ஒரு செய்தியாளர் சந்திப்பைக்கூட நடத்தாதது அவர்களுக்குப் பலவீனமாகத் தெரிகிறது.
ஊடகத் தவிர்ப்பு: ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களைச் சந்திக்காமல், ஒரு மக்கள் தலைவராக உருவெடுப்பது சாத்தியமா என்ற கேள்வி கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது.
தொண்டர்களுடன் நிற்கவில்லை: சமீபத்தில் தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டது. ஆனால் அப்போது கூட விஜய் வெளியே வரவில்லை.
"நாங்கள் மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்கிறோம். ஆனால், தலைவர் விஜய் ஏன் இன்னும் கேமராக்களுக்கு முன்னால் வந்து பேச மறுக்கிறார்? சினிமாவுக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் இருக்கிறது," என தவெக நிர்வாகிகள் கடுமையாக அதிருப்தி அடைந்து உள்ளனர்.
2026-ன் சவால்கள்
திரைப்படங்களில் வசனம் பேசுவதோடு அரசியல் நின்றுவிடுவதில்லை. ஒரு கட்சியின் தலைவர் என்பவர் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும், கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். மற்ற கட்சித் தலைவர்கள் காட்டும் அந்தத் தீவிரமான உழைப்பும், வெளிப்படைத்தன்மையும் விஜய்யிடம் இல்லாதது, அவர் மீதான நம்பகத்தன்மையைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது.
பனையூர் வீட்டு அலுவலகத்தில் கட்சிப் பணிகள் நடந்தாலும், விஜய்யின் இந்தத் 'தனிமைப் போக்கு' மாறாவிட்டால், அது 2026 தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications