பொதுமக்கள் கவனத்திற்கு.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? வாக்குச்சாவடிக்கு கிளம்புங்க!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.83 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.
பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட SIR பணிகள், டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

மொத்தமாக தமிழ்நாட்டில் இருந்து 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிகபட்சமாக சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்களும், கோவையில் 6.50 லட்சம் வாக்காளர்களும், திருப்பூரில் 5.63 லட்சம் வாக்காளர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 லட்சம் வாக்காளர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6.19 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.41 கோடியில் இருந்து 5.43 கோடியாக குறைந்துள்ளது. இது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஜனவரி 18ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.83 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கவுள்ளது. இதனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், இந்த சிறப்பு முகாம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தகுதியுடைய வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவோ அல்லது பெயரை நீக்கவோ படிவம் 7 மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதனால் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!












Click it and Unblock the Notifications