Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநரின் 5 பொய்கள்; தமிழறிஞர் தந்த விளக்கம்! வள்ளுவர் காவி சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவி, திருவள்ளுவர் பற்றி 5 பொய்களைக் கூறியுள்ளதாகப் பேராசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.

பொதுவாகப் பொங்கல் பண்டிகைக் காலங்களில் ஜல்லிக்கட்டுதான் சர்ச்சைக்குரிய விசயமாக வெடிக்கும். ஆனால், இந்த முறைக் காளையை விட்டுவிட்டார்கள். அந்தச் சர்ச்சை நாற்காலியில் திருவள்ளுவரைத் தூக்கி அமர வைத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

Six lies told by Governor Ravi about Tiruvalluvar

அண்ணாதுரை முதலமைச்சராக இருந்த காலத்திலேயே வள்ளுவரின் உருவம் எப்படி இருக்கவேண்டும் என்று அரசு ஒரு ஓவியத்தை வரைந்து வெளியிட்டுள்ளது. அதையே அரசு அலுவலர்களில் பயன்படுத்த வேண்டும் என்று அரசாணையையும் போட்டுள்ளது.

அதை அடிப்படையாகக் கொண்டு 1960இல் தமிழ்நாடு ஆளுநராக இருந்த பிஷ்ணுராம் மேதி, வள்ளுவருக்குத் தபால்தலை வெளியிடுவதற்கான உத்தரவை வெளியிட்டிருந்தார்.

இப்படிப் பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் பயன்பாட்டிலுள்ள வள்ளுவர் படத்திற்கு உருத்திராட்சை மாலை அணிவித்துக் காவி உடை உடுத்து ஒரு அரசு விழாவை ஆளுநர் ரவி நடத்தியிருக்கிறார். அதற்கு எதிராகப் பல தமிழறிஞர்கள் உட்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனத்தைப் பதிய வைத்துள்ளனர்.

வள்ளுவர் குறித்து ஆர்.என்.ரவி சர்ச்சையைக் கிளப்புவது முதல்முறை அல்ல. சில ஆண்டுகள் முன்பே இதே காரியத்தை அவர் செய்திருந்தார். ஏன் வள்ளுவரை டார்கெட் செய்கிறார்கள்? அதன் உள்நோக்கம் என்ன? என்று சில தமிழறிஞர்களிடம் கேட்டோம்.

Six lies told by Governor Ravi about Tiruvalluvar

முதலில் சிந்துவெளி நாகரிகம் பற்றியும் தமிழர்களின் தொன்மையான கீழடி நாகரிகம் பற்றியும் தொடர்ந்து எழுதி வரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர் பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.

"ஒடிசா மாநிலத்தின் பண்பாட்டுச் செயலாளராக இருந்த காலத்தில், ஒரிய பண்பாட்டுக்கு என்று தனி பல்கலைக்கழகம் தொடங்கினோம். அப்போது திருக்குறளுக்கு என்று ஒரு 'இருக்கை' உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அதற்கு ஒடிசா மாநில அரசிடம் நிதி கேட்க முடியாது.

Six lies told by Governor Ravi about Tiruvalluvar

அப்போது எனது ஆசிரியர் தமிழ்க்குடிமகன் தமிழ்நாட்டில் அமைச்சராக இருந்தார். அவரிடம் கோரிக்கை வைத்தோம். அவர் தமிழக அரசிடமிருந்து 10 லட்சம் ரூபாய் அளித்தார். அதைக் கொண்டு ஒரு இருக்கையை அமைத்தோம்.

அதற்கு முன்னதாகவே 1990இல் திருக்குறளை ஒரிய மொழியில் மொழிபெயர்த்தோம். அதன்பின்னர் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு ஏழு இன்பத்துப்பாடல்களை நாட்டுப்புற மெட்டுகளில் 'நாட்டுக்குறள்' என்று ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்றினோம்.

அதை ஏன் செய்தோம் என்றால், அப்போது திருக்குறளை யாரோ கையகப்படுத்த முயல்கின்றார்கள் என்ற சந்தேகம் வந்தது. திருக்குறளைக் கையகப்படுத்துவது என்பது புதிய முயற்சி இல்லை.

Six lies told by Governor Ravi about Tiruvalluvar

'திருவள்ளுவமாலை' நூலைப் படித்தாலே போதும். இது ஒருவகையில் போற்றுவதாக இருக்கும். அதேசமயத்தில் வள்ளுவரைப் பற்றிய கட்டுக்கதைகளையும் அது கொண்டிருந்தது என்பது உண்மை.

பொதுவாகக் கட்டிடத்தைக் கட்டுவது கஷ்டம். ஆனால் இடிப்பது சுலபம். ஆனால் கட்டுக்கதைகளை இடிப்பது கஷ்டம். கட்டுவது எளிது. இந்தக் கட்டுக்கதைகளை உடைப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை யார் கட்டுகிறார்கள் என்பது.

திருவள்ளுவரை ஒரு பவுத்தர் என்று அயோத்திதாசர் கட்டமைக்கிறார். அவர் திருக்குறள் என்று எழுதமாட்டார். திரிக்குறள் என்றுதான் எழுதுவார். திருக்குறள் எந்தச் சமயத்தையும் முன்வைக்கவில்லை.

Six lies told by Governor Ravi about Tiruvalluvar

அப்படி என்றால் திருவள்ளுவர் சமய நம்பிக்கை அற்றவரா சிலர் கேள்வி எழுப்பலாம். அப்படியில்லை. திருவள்ளுவர் சமய நம்பிக்கை உடையவராக இருந்திருக்கலாம். ஆனால், அவர் எந்தச் சமய நம்பிக்கையின் சார்பாகவும் பேசியவர் இல்லை.

நான் இந்தியா முழுவதும் சென்று பணியாற்றி இருக்கிறேன். இந்தியா முழுவதும் ஜாதியை இரண்டு வகையாகத்தான் பிரித்திருக்கிறார்கள். கலப்பையைத் தொட்டவன் தாழ்ந்தவன். கலப்பையைத் தொடாதவன் உயர்ந்தவன். இந்த முறைதான் இந்தியா எங்கும் உள்ளது.

Six lies told by Governor Ravi about Tiruvalluvar

இதற்கு மாறாகக் கலப்பைத் தொட்ட உழவனை உயர்ந்த ஜாதி என்று சொன்ன முதல் நூல் சங்க இலக்கியம். அடுத்து திருக்குறள். இந்த இரண்டும்தான். வேறு நூல் எதுவுமே உழவனை உயர்ந்தவன் எனச் சொன்னதில்லை.

அடுத்ததாகப் பேராசிரியர் வீ.அரசு என்ன சொல்கிறார் எனக் கேட்டோம். அவர், "நானும் ஆளுநரின் அறிக்கையைப் படித்தேன். அதில் அவர் 5 பொய்களைச் சொல்லி இருக்கிறார். முதலில் காவிக்கும் திருவள்ளுவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Six lies told by Governor Ravi about Tiruvalluvar

இந்தக் காவி உடையை அணிவிப்பதை நீண்ட நாள்களாகவே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி கட்சியினர் செய்து வருகிறார்கள். அதையே ஆளுநரும் செய்துள்ளார்.

இரண்டாவது, பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி என்று வள்ளுவரைச் சொல்கிறார். பாரதிய சனாதன தர்மம் என்பது அடிப்படையில் நான்கு வர்ணாஸ்ரமங்களைப் பேசுகிறது.

ஆனால், வள்ளுவர் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' என்கிறார். உலகத்தில் பிறந்த எல்லா உயிர்களும் சமமானவை. வெவ்வேறு தனித் தொழில்கள் செய்துவந்தாலும் அதனால் வேற்றுமை என்பது இல்லை என்கிறார். அப்படிப்பட்ட வள்ளுவரைச் சனாதன கருத்துகளுடன் ஒப்பிடுகிறார் ஆர்.என்.ரவி. இது மிகப்பெரிய நகைச்சுவை.

Six lies told by Governor Ravi about Tiruvalluvar

மூன்றாவது, வள்ளுவரைத் துறவி என்கிறார். 'மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்' என்று சாமியார்களை எல்லாம் ஒரு போடு போட்டுள்ளார் வள்ளுவர். நீ தாடி வைக்க வேண்டாம். மொட்டைப் போடவேண்டாம் என்று சொல்கிறார் அவர்.

இதை அவர் எங்கே சொல்கிறார்? துறவறம் பற்றிப் பேசும் பகுதியில் சொல்கிறார். அவரைத்தான் ஆர்.என்.ரவி துறவி என்கிறார். இதுவும் மிகப் பெரிய பொய்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+