ஸ்டாலினை குறிவைக்கும் 6 ஆயுதங்கள்.. சுற்றி பின்னப்படும் சதிவலை! முரசொலியில் பிரபல இயக்குநர் கட்டுரை!
சென்னை : "முதல்வர் ஸ்டாலினை அரசியலில் சாய்த்து விட சதி வலை பின்னப்படுகிறது. 6 ஆயுதங்கள் ஏவப்படுகிறது. புகையாக பகை உள்ளே நுழைய முயலும் போது அதனை தடுக்க நமக்குள் எத்தனை நெருக்கம் வேண்டும். ஒற்றுமை ஒன்றே பகை வெல்ல ஒரே வழி" என முரசொலியில் கட்டுரை எழுதியுள்ளார் பிரபல இயக்குநர் வி.சி.குகநாதன்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், பிரபல இயக்குநரும், திமுக ஆதரவாளருமான வி.சி.குகநாதன் கட்டுரை எழுதி வருகிறார். அந்தவகையில், சமீபநாட்களாக திமுகவை சுற்றிச் சுழன்ற சர்ச்சைகள் எல்லாவற்றையும் பொருத்தி, முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக ஏவப்படும் 6 ஆயுதங்கள் எனக் குறிப்பிட்டு கட்டுரை எழுதியுள்ளார் வி.சி.குகநாதன்.

சூழ்ச்சி வலை வியூகம் : அந்தக் கட்டுரையில், "கடினமான காலங்களை சந்திக்கின்ற போது நம்மை மீறிய எதிர்ப்புகள் வலுக்கும் போது எதிரிகள் நம்மை சூழ்ச்சி வலையில் சிக்க வைக்க வியூகங்கள் வகுக்கும்போது நாம் சர்வ ஜாக்கிரதையாக அதனை தாண்டி வருவதற்கு முதலிலே அவசியம் ஒற்றுமையே. நமக்குள் எந்தக் காரணத்திற்காகவும் கருத்து வேறுபாடோ ஒற்றுமையை குலைக்கின்ற செயல்களோ ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும் என்கிற நம் மூத்தோருடைய மொழியை நாம் மறந்து விடக்கூடாது.

அண்மையில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தேர்தல் இதற்கு ஒரு உதாரணம். அந்த தேர்தலை ஒரு பார்வையாளராக ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கிக் கொண்டிருந்தவன் நான். தேனாண்டாள் முரளி ராமசாமிக்காக தற்போதைய அரசு எதை வேண்டுமானாலும் செய்து அவரை வெற்றி அடையச் செய்வார்கள் என்று ஒரு பொய் பிரச்சாரம் பரவியது. நான் பார்த்தவரையில் அப்படி ஒரு உதவி வரவே இல்லை. தேர்தல் கண்காணிப்பாளர்களாக இருந்த ஓய்வு பெற்ற இரண்டு நீதிபதிகளின் பணி மிகவும் நேர்த்தியாக நடந்தது.
களை எடுக்கப்பட வேண்டும் : நெல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் புல் களை எடுக்கப்பட்டே ஆக வேண்டும். புல் மேல பாவம் பரிதாபம் காட்டினால் நெல் பாதிக்கப்படும். மேல்மட்டத்தில் மட்டும் திறமையாளர்கள் இருந்தால் போதாது. அடிமட்ட தொண்டனும் மனநிறைவு பெற வேண்டும். நமது பல நல்ல திட்டங்கள் மேடைகளிலும் ஊடகங்களிலும் வந்தால் மட்டும் பயன் தராது. அவற்றை செயல்படுத்தும் மூன்றாம் கட்ட அதிகாரிகள் நம்மை விரும்பி புரிந்து மக்களை அரவணைத்துச் செயலாற்றும் நம்மவர்களாக இருப்பதே நல்லது.
பேரறிஞர் அண்ணா ஆரம்பத்தில் வைத்த கொள்கை முழக்கம்.. அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்பதே ஆகும். வீரமும் விவேகமும் இணைந்து அன்று அண்ணா பின்னால் அணி வகுத்தது. அதை பார்த்து டெல்லி கலங்கியது. அதனால் நேரு பிரிவினை தடைச் சட்டம் இயற்றினார். அண்ணாவை ஜெயிலிலேயே தள்ளிவிட முயற்சிகள் நடந்தன. எல்லாம் தெரிந்த அண்ணா சிந்திக்க ஆரம்பித்தார். கலந்து ஆலோசித்தார். தன் பின்னாலே சேர்ந்து பெருங்கூட்டத்தை சட்டத்துக்கு பலி கொடுத்து ஜெயிலுக்கு அனுப்புவதா அல்லது அவர்களை ஆட்சியில் அமர வைத்து மாநிலத்திற்கு வளம் சேர்ப்பதா? பிரிவினை என்கிற ஜீவாதாரக் கொள்கையை கைவிட்டு தேர்தலை சந்தித்து கோட்டையைப் பிடித்து தமிழ்நாட்டை உருவாக்கினார்.
6 ஆயுதங்கள் : இன்றைக்கு அவரது அன்புத்தம்பி நம் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடலை கையில் எடுத்திருக்கிறார். இதனை நமது மாநிலம் மட்டுமல்ல மற்ற மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் அணி திரள ஆரம்பித்து விட்டனர். இந்தியாவின் ஆட்சி மாற்றத்திற்கு இது வித்திடுகிறது என்பதை உணர்ந்த மத்திய அரசு எல்லா வழிகளிலும் நமது முதல்வரின் செயல்களை முடக்கிவிட முழு பல பிரயோகம் முறுக்கி விடப்பட்டிருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டு அவர்களின் முதல் ஆயுதம், ஊடகப் பிரச்சாரங்கள் அவர்களது இரண்டாவது ஆயுதம்.
பல குற்றச்சாட்டுகளுக்கு பலியாகி போவதற்கு இடம் தெரியாமல் மத்திய ஆட்சியாளர்களின் காலியிலே விழுந்து கிடக்கும் துரோகிகளையும் சிறைத் தண்டனை பெற்றவர்களையும் பயன்படுத்தி சாதி அரசியலை மூன்றாவது ஆயுதமாகவும், கீழ்மட்ட அதிகாரிகளை வைத்து அடித்தட்டு மக்களின் ஆசைகளை தூண்டிவிட்டு போராட்டங்களை நடத்த வைப்பது நாலாவது ஆயுதமாகவும், வந்தேறிகளின் மத அரசியலை ஐந்தாவது ஆயுதமாகவும், ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகம் ஆறாவது ஆயுதமாகவும் பயன்படுத்தி அண்ணாவின் தம்பியை திராவிட மாடல் நாயகனை நமது நம்பிக்கை நட்சத்திரத்தை முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினை அரசியலில் சாய்த்து விட சதி வலை பின்னப்படுகிறது.

தந்தை பெரியாரின் பகுத்தறிவு பிள்ளைகளே.. பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பிகளே.. கலைஞரின் உடன்பிறப்புகளே.. பாதை மாறிப் போனால் பயணம் ஊர் போய் சேராது. ஒற்றைச் செங்கல் கூட உறுதியற்றதாக இருந்து விடக்கூடாது என்று பார்த்துப் பார்த்து கட்டப்பட்ட திராவிட கோட்டைக்கு இன்று வலுவான ஒரே தலைவன் ஸ்டாலின் மட்டும்தான். புகையாக பகை உள்ளே நுழைய முயலும்போது அதனை தடுக்க நமக்குள் எத்தனை நெருக்கம் வேண்டும். ஒற்றுமை ஒன்றே பகை வெல்ல ஒரே வழி. ஒற்றைக் குரலில் ஒலிப்போம் அண்ணாவின் தம்பி ஸ்டாலினின் திராவிட அரசியலே இனி இந்தியாவை ஆளவும் இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கவும் இருக்கும் ஒரே அரசியலாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications