சென்னையில் இன்று மின்தடை.. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது! கவனம் மக்களே
சென்னை: சென்னையில் இன்று மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று (ஜுன் 6) ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் மாநிலம் முழுவதும் மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று (ஜுன் 6 தேதி) சென்னையில் மின்வாரியம் பராமரிப்பு பணியை மேற்கொள்கிறது. இதனால் சில இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 06.06.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை 33/11 கி.வோ. ஈஞ்சம்பாக்கம் துணை மின் நிலையத்தில் உள்ள 11 கி.வோ பனையூர் மின்னூட்டி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக பனையூரில் சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
அதன்படி குடுமியாண்டி தோப்பு பள்ளி தெரு, காயிதே மில்லத் தெரு, வேலு நாயக்கர் தெரு, அதித்யாராம் நகர், என்ஆர்ஐ லேஅவுட் (விஜிபி சவுத் அவென்யூ), ஜெ நகர், (செம்மொழி தெரு) பனையூர் குப்பம் ஏரியா, சீ ஷோர் டவுன் ஒன்று முதல் பதிமூன்றாவது அவென்யூ வரை, சமுத்ரா தெரு, (ராஜாஜி தெரு) மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.
பராமரிப்பு பணியால் இந்த இடங்களில் இன்று காலை நிறுத்தப்படும் மின்சாரம் மீண்டும் மதியம் 02.00 மணிக்குள் மறு விநியோகம் செய்யப்படும்'' என கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தி செய்ய வேண்டிய பணிகளை காலை 9 மணிக்குள் செய்து முடித்து கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications