Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குறுகிய காலத்தில் "கோடீஸ்வரியான" சின்னத்திரை நடிகை சித்ரா?.. இத்தனை சொத்துகளா?.. எப்படி கிடைத்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா குறைந்த காலத்திலேயே அதிகமான சொத்துகளை குவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜே சித்ரா குறித்து அன்றாடம் ஒவ்வொரு செய்திகள் காற்று வாக்கில் வந்து விழுகின்றன. இவற்றில் எத்தனை உண்மை, எத்தனை வதந்தி என்பது தெரியவில்லை. எனினும் சித்ரா குறித்து அவரது தோழி ரேகா நாயர் கூறி வரும் தகவல்களை அதிகாரப்பூர்வமாக கருதி ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் விஜே சித்ரா குறித்து ரேகா நாயர் கூறும் கருத்துகள் அனைத்தையும் அவரா இப்படி என நினைக்க தோன்றுகிறது. சித்ரா நிறைய ஆண்களுடன் சகஜமாக பழகுவார்.

கேசுவலாக இருப்பார்

கேசுவலாக இருப்பார்

எந்த விஷயமாக இருந்தாலும் கேசுவலாக எடுத்துக் கொள்வார். அவரது கணவர் வீட்டில் நிறைய ஆணுறைகள் இருந்தன. கணவன் மனைவியாக இருக்கும் இவர்களுக்கு எதற்காக இத்தனை ஆணுறைகள் என்ற கேள்விகளை ரேகா நாயர் எழுப்பினார். அது போல் ஹேமந்த்தின் நண்பர் இம்மானுவேலும் ஹேமந்த்தின் அறையை காலி செய்யும் போது டப்பா டப்பாவாக ஆணுறைகள் இருந்ததை வீடியோவாகவே காண்பித்தார்.

திருவான்மியூரில் ஒரு வீடு

திருவான்மியூரில் ஒரு வீடு

சித்ரா சிறந்த உழைப்பாளி. அவர் திருவான்மியூரில் ஒரு அபார்ட்மென்டில் இரு படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டை கட்டியுள்ளார். அவருக்கு பிஎம்டபிள்யூ கார் இருப்பதாக அவர் இறந்த போது சொல்லப்பட்டது. குறுகிய காலத்தில் மீடியாவில் பிரபலமடைந்தாலும் நிறைய சொத்துகளை சேர்த்துள்ளதாக பேசப்பட்டது.

சித்ரா தாய் மறுப்பு

சித்ரா தாய் மறுப்பு

இதை புலனாய்வு பத்திரிகையும் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் இதை சித்ராவின் தாய் மறுத்தார். அவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் எங்களுக்கு வீடு இருக்கு, கார் இருக்கு என்றெல்லாம் பத்திரிகையாளர் ஒருவர் கூறி வருகிறார். ஆனால் எங்களுக்கு இருப்பது திருவான்மியூரில் சித்ரா லோனில் வாங்கிய வீடு இருக்கிறது.

ரூ 45 லட்சம் கார்

ரூ 45 லட்சம் கார்

அதற்கு மாத தவணை கட்ட முடியாமல் சிக்கித் தவித்து வருகிறோம். காரும் இருந்தது, இது சொகுசு கார் இல்லை. அதன் மதிப்பு ரூ 60 லட்சம் இல்லை, 45 லட்சம்தான். அதற்கான மாத தவணை கட்ட முடியாததால் அந்த காரை கடனளித்தவர்கள் திரும்பி எடுத்துச் சென்றுவிட்டனர். எங்களுக்கு வீடு மட்டுமே சொத்து என தெரிவித்திருந்தனர்.

குறுகிய காலத்தில் சித்ராவுக்கு சொத்துகள்

குறுகிய காலத்தில் சித்ராவுக்கு சொத்துகள்

ஆனால் சித்ராவுக்கு தாம்பரத்திலும் மடிப்பாக்கத்திலும் சொந்த வீடு இருப்பதாகவும் அதன் மூலம் கிடைக்கும் வாடகை பணம் சித்ராவின் பெற்றோருக்கு கிடைப்பதாகவும் புலனாய்வு பத்திரிகை தெரிவித்துள்ளது. எதற்காக சித்ராவின் தாய் மறைக்கிறார் என தெரியவில்லை. அவர் உண்மையை பேசினால்தான் அவரது மகளின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் "சித்ராவுக்கு அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு இருந்ததால்தான் அவரால் குறுகிய காலத்தில் இத்தனை சொத்துகளை வாங்கி குவிக்க முடிந்தது" என்றும் தகவல்கள் வைரலாகி வருகிறது. இதெல்லாம் உறுதிப்படுத்த முடியாத தகவல் என்றாலும் சித்ரா வழக்கில் கிடைத்த அப்டேட்டுகளாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+