பள்ளிக்கரணை பகுதியில் பிரம்மாண்ட இன்ப அதிர்ச்சி..நெகிழ்ந்து போய் தமிழச்சி தங்கப்பாண்டியன் செய்த செயல்
சென்னை: தென் சென்னை தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இன்று சோழிங்கநல்லூர் - பள்ளிக்கரணை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது , அவருக்கு ஜேசிபி மூலம் பூக்கள் தூவி அட்டகாசமான வரவேற்பு அளித்துள்ளார் சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் என ஆறு தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் கடந்த முறை களம் கண்ட தமிழச்சி தங்கப்பாண்டியன் களம் இறங்குகிறார்.. அதிமுக சார்பில் கடந்த முறை தோல்வியை தழுவிய டாக்டர் ஜெயவர்தன் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கவர்னராக இருந்து ராஜினாமா செய்த தமிழிசை சௌந்திரராஜன் களம் இறங்கி உள்ளார். நாம் தமிழர்கட்சி சார்பில் தமிழ்ச்செல்வி போட்டியிடுகிறார்.

தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை படித்தவர்கள் அதிகம் இருக்கும் தொகுதியாகும். இங்கு திமுக சார்பி மீண்டும் களம் இறங்கி உள்ள தமிழச்சி தங்கப்பாண்டியன் 2014ல் வெற்றி பெற்றது போல் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழச்சி தங்கப்பாண்டியன் கடந்த மார்ச் 25ம் தேதி தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்த உடனேயே பிரச்சாரத்தை ஆரம்பித்தார். சைதாப்பேட்டை - நெருப்புமேடு பகுதியிலிருந்து முதல் நாளில் பிரச்சாரம் மேற்கொண்டார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.
மறுநாள் , அதாவது மார்ச் 26ம் தேதி மயிலாப்பூர் கிழக்கு பகுதியில் தொடங்கி மாதவநகர் ஆர்.கே.நகர், வள்ளீஸ்வரன் தோட்டம், கட்டபொம்மன் தெரு, காமராஜர் சாலை, சீனிவாச அவின்யூ, ராஜா முத்தையாபுரம், குட்டிகிராமணி தெரு, கபாலி வனபோஜன தோட்டம், நாராயணசாமி தோட்டம் இரண்டாவது சாலை, ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் எஸ்.கே.பி. புரம், அன்னை தெராசா நகர், அன்னை சத்தியா நகர், கிரீன்வேஸ் ரோடு, ஆர்.கே.மடம் சாலை, ராஜா தெரு, ராஜா கிராமணி தோட்டம், காவலர் குடியிருப்பு, சீனிவாசபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் தமிழச்சி தங்கப்பாண்டியன் வாக்கு சேகரித்தார்.
இன்று காலை மயிலாப்பூர் கிழக்கு பகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து சோழிங்கநல்லூர் - பள்ளிக்கரணை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது , அவருக்கு ஜேசிபி மூலம் பூக்கள் தூவி அட்டகாசமான வரவேற்பு அளித்துள்ளார் சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ்.
மேலும் கிரேன் மூலம் ராட்சத ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டது. பிரம்மாண்ட முறையில் நடந்த இந்த வரவேற்பை பார்த்த தமிழச்சி தங்கப்பாண்டியன் கையெடுத்து கும்பிட்டு நெகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications