தென் மாவட்ட பயணிகளுக்கு ஸ்வீட் நியூஸ்.. வேற லெவல் ஸ்பீடு.. 130 கிமீ வேகத்தில் பாயப் போகும் ரயில்கள்
சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீட்டர் வரை அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் பட்சத்தில் பயண நேரம் பல நிமிடங்கள் மிச்சமாகும்.
தமிழகத்தில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். தொழில் நிமித்தமாகவும் பணிக்காகவும் சொந்த ஊர்களை விட்டு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் விடுமுறை காலங்களிலும் பண்டிகை காலங்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்வதுண்டு.

குடும்பத்துடன் செல்லும் பயணிகள் முதலில் ரயிலில் செல்லத்தான் விரும்புவார்கள். இதனால், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் எல்லாம் சாதாரண நாட்கள் கூட டிக்கெட்டுகள் கிடைக்காது. பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால் மட்டுமே ரயிலில் டிக்கெட் கிடைக்கும் என்ற நிலைதான் உள்ளது.
அதுவும் பண்டிகை நாட்களில் சொல்லவே தேவையில்லை. முன்பதிவு இல்லாத பொது பெட்டியில் பயணிகள் நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழியும். தற்போது சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயில் மூலமாக செல்ல சராசரியாக 10.45 மணி நேரம் வரை ஆகிறது. இந்த நிலையில், பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாக ரயிலின் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை மேலும் குறைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:- ரயில் வழித்தடங்களின் தரம் உயர்த்துவது, சிக்னல் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் வேகம் தற்போது மணிக்கு 110 கி.மீட்டர் என்ற அளவில் உள்ளது. இந்த வேகம் 130 கி.மீட்டராக அதிகரிக்கப்படும்.
இந்த அதிகரிக்கப்படும் வேகத்தால் பயண நேரம் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை குறையும். இதனால் பயணிகள் நேரம் கணிசமாக மிச்சப்படும். இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் புதிய காலஅட்டவணையில் இடம் பெறும்" என்று கூறப்பட்டது. பல வழித்தடங்களிலும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் விதமாக ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை சென்ட்ரல் - கூடூர், சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை தடத்தில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் விரைவில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகரிகள் கூறியிருப்பது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டி தரும் ரயில்வே வழித்தடங்களிள் தென் மாவட்ட ரயில்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
எப்போதும் கூட்டம் நிரம்பி வழிந்த படி தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் செல்வதை காண முடியும். ரயிலின் வேகம் அறிவிக்கப்பட இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வந்தே பாரத் ரயிலையும் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications