மகளை பார்த்ததும்.. முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.. சுயநினைவை பெற்ற எஸ்பிபி.. எப்படி இருக்கிறார்?
சென்னை: பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் தற்போது கொரோனா காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று அவரின் மகன் எஸ்பி சரண் விளக்கம் அளித்துள்ளார்.
பாடகர் எஸ்.பி.பி கடந்த மாதம் 5ம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னையில் அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவரின் உடல்நிலை தொடக்கத்தில் நன்றாகவே இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பின் இவரின் உடல்நிலை வேகமாக நலிவு அடைய தொடங்கியது. உடல் ஆரோக்கியம் ஏற்ற இறக்கமாக இருந்தது.
புதிய உச்சம்..இந்தியாவில் ஒரேநாளில் 82,507 பேருக்கு கொரோனா! மகாராஷ்டிராவில் 17,433 பேருக்கு பாதிப்பு
உடல் எப்படி
சில நாட்கள் அவரால் எளிமையாக மூச்சு விட முடிந்தது. சில நாட்கள் சரியாக மூச்சு விட முடியவில்லை. தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகளும் வெளியாகி வந்தது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி அளிக்கும் வகையில் எஸ்.பி.பி மகன் எஸ்பி சரண் தினமும் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.
எஸ்.பி.பி எப்படி இருக்கிறார்
இந்த நிலையில் தற்போது எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அவரின் மகன் சரண் தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி எஸ்.பி.பி தற்போது 95%க்கும் மேல் சுயநினைவை பெற்றுவிட்டார். நன்றாக மூச்சு விடுகிறார். லேசான சிரமம் இருந்தாலும் உடல்நிலை முன்னேறி வருகிறது. தன்னை பார்க்க வரும் நபர்களை அடையாளம் காண்கிறார்.
உடல்நிலை
அவரின் தசைகள் இறுக்கம் ஆகியுள்ளது. இதற்காக தற்போது பிசியோ அளிக்கப்பட்டு வருகிறது. பிஸியோவிற்கு உடல் ஒத்துழைப்பு அளிக்கிறது. பிசியோ காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அவரின் தசைகள் மாற்றம் அடைந்து வருகிறது. அவர் எழுந்து நடக்க இந்த பிசியோ உதவும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
முன்னேற்றம்
அவரின் உடல் நிலை வேகமாக முன்னேறி வருகிறது. விரைவில் அவர் குணமடைய வாய்ப்புகள் உள்ளது. முன்பு மிகவும் சிரமப்பட்டார். ஆனால் தற்போது அவரின் உடல்நிலை வேகமாக குணமடைந்து வருகிறது, கைகள் இயக்கம் சரியாகி உள்ளது என்று கூறப்படுகிறது. முன்னதாக எஸ்.பி.பியை பார்க்க சரண் மற்றும் அவரின் சகோதரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
மகளை பார்த்தது
தனது மகளை பார்த்ததும் எஸ்.பி.பி சந்தோசம் அடைந்து உள்ளார். அவரின் முகத்தில் பெரிய அளவில் மகிழ்ச்சியை காட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அப்பாக்களுக்கு எப்போதும் மகள் என்றால் தனி பாசம் இருக்கும். எஸ்.பி.பியும் அதே போல் மகளை பார்த்ததும் சந்தோசத்தை முகத்தில் காட்டி இருக்கிறார். இதனால் இவர் மீண்டும் உடல்நலம் பெற்று திரும்புவார் என்று நம்பிக்கை எழுந்துள்ளது.