தொடர்ந்து ஐசியூவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.. உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சிகிச்சை
சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் ஐசியூவில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறார் என்று, எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள, எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
3 நாட்கள் முன்பு, பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இது ரசிகர்களை பெரும் கவலைக்குள்ளாக்கியது.
பாடல் ராஜாவே.. எங்கே நீ எங்கே.. எஸ்பி பாலசுப்ரமணியத்துக்காக பாட்டுப்பாடி உருகும் கவிஞர் வைரமுத்து!

வாழ்த்து மழை
இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலன் பெற இறைவனை வேண்டுவதாக தெரிவித்தனர். இந்த நிலையில், அடுத்த நாளே, அவரது உடல்நிலை முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

கண்காணிப்பு
இந்த நிலையில், இன்று எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: எம்ஜிஎம் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள எஸ்பி பாலசுப்பிரமணியம் ஐசியூவில் தொடர்ந்து உயிர்காக்கும் உபகரணங்களின் சிகிச்சை உதவியுடன் உள்ளார். மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசை பயணம்
இதனிடையே, எஸ்.பி.பி தங்க வைக்கப்பட்டுள்ள அறையில், அவர் பாடிய பிரபல பாடல்கள் ஒலிக்கவிடப்படுகின்றன. "முதல்முறை பாடல் பாடியபோது தெரியாது.. இசை என்னை 50 வருடம் பயணிக்க வைக்க போகுதுன்னு.." என்று கூறியவர் எஸ்பிபி. இசை அவருக்கு ஒரு அருமருந்து. எனவேதான், பாடல்கள் இசைக்கவிடப்படுகின்றன.

பாடல்கள்
எஸ்.பி.பாலசுப்பிரமணியமுக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மயக்க நிலையிலிருந்து மீண்ட எஸ்பிபி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டு வார்டில் சிகிச்சை பெறுகிறார். இந்த நிலையில்தான், இசை சிகிச்சைகள் நல்ல பலனைத் தருவதாக மருத்துவர்கள் வட்டாரத்தில் கூறுகின்றனர். தனது, இனிய குரலால் பலரை மகிழ்வித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தான் பாடிய பாடலை கேட்டு மீண்டு வருவார் என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications