எக்மோ சிகிச்சையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.. ஏன் இந்த சிகிச்சை வழங்கப்படுகிறது? எப்படி செயல்படும்?
சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு, எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Recommended Video
இதற்கு முன்பு எக்மோ என்ற வார்த்தையை, தமிழகம் அடிக்கடி கேள்விப்பட்டது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல பாதிப்பால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதுதான்.
வென்டிலேட்டர் சிகிச்சையைவிடவும் மேம்பட்டதா எக்மோ சிகிச்சை? எப்படி, எதற்காக இந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இதோ ஒரு விளக்கம்:

செயற்கை நுரையீரல்
Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதைத்தான் எக்மோ என்று சுறுக்கமாக சொல்கிறோம். இது செயற்கை நுரையீரல் போன்ற ஒரு உபகரணமாகும். நுரையீரல் செயல்படாத நேரத்தில் இந்த கருவி பொருத்தப்படுவது வழக்கம். 1970களில் இருந்து இந்த கருவி மருத்துவ பயன்பாட்டில் உள்ளது. இந்த கருவி, இதயம் மற்றும் மூச்சு சீராக இருப்பதை உறுதி செய்யும்.

சிறு கருவி
ஆக்சிஜனை உடலுக்கு சேர்க்கும் பணியை நுரையீரல் செய்ய வேண்டும். ஆனால் அது செயல்படாமல் போகும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். அப்போதுதான், இந்த கருவி மிகுந்த அவசியப்படுகிறது. இதற்காக, catheter என்ற சிறு கருவி (பேஸ்மேக்கரை போல), இதயத்தின் அருகேயுள்ள மைய ரத்த நாளத்தில் பொருத்தப்படும். செயற்கை பம்ப் ஒன்று, இந்த கருவிக்குள், ரத்தத்தை செலுத்தும்.

ஆபத்தான கட்டங்களில் உதவும்
அப்படி ரத்தம் செலுத்தப்படும் முன்பாக, ஆக்சிஜனை கலக்கும் ஒரு கருவி வழியாக அந்த ரத்தம் பாயும். அப்போது உரிய ஆக்சிஜன் ஏற்றப்ட்டு, உடலுக்குள் ரத்தம் செய்வது உறுதி செய்யப்படும். சுவாச கோளாறால் நோயாளியின் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும்போது, இது பயன்படுத்தப்படுகிறது.

தீர்வு
பம்ப் போன்ற கருவி மூலம், ரத்தத்தை வெளியே எடுத்து, அதில் ஆக்சிஜனை கலந்து மீண்டும், மத்திய நரம்பு மூலமாக அதை செலுத்தும் நடைமுறைக்கு பெயர் வெனோவெனஸ் எக்மோ என அழைக்கப்படுகிறது. இது காற்று மாற்று செயல்பாடு மட்டுமே. நரம்பு வழியாக வெளியே எடுக்கப்படும் ரத்தம், மீண்டும், arteryவுக்குள் செலுத்தப்படும் நடைமுறைக்கு பெயர் வெனோரடேரியல் எக்மோ. இவ்விரு செயல்பாடுகள் மூலம், சுவாசப்பிரச்சினை, ரத்தம் உந்தி தள்ளப்படும் பிரச்சினை ஆகிய இரண்டும் தீர்க்கப்படும்.












Click it and Unblock the Notifications