பாஜக நிர்வாகியும், ரௌடியுமான மின்ட் ரமேஷ் தொடர்புடைய இடங்களில் தனிப்படை போலீசார் ரெய்டு!
சென்னை: பாஜக நிர்வாகியும் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய நபரான, மின்ட் ரமேஷ் என்பவர் வீடு உள்பட 9 இடங்களில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் மின்ட் ரமேஷ் தொடர்புடைய ஜே.ஜே நகர், செங்குன்றம், புழல், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனிப்படை போலீசாரின் சோதனையில் சிக்கியுள்ள பாஜக நிர்வாகி மின்ட் ரமேஷ் என்பவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது வடசென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பாஜக நெசவாளர் அணி நிர்வாகி மின்ட் ரமேஷ், அரசு நிலத்தை அபகரித்ததாக எழுந்த புகாரில் அவர் தொடர்புடைய 9 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர், பாஜக நெசவாளர் அணியின் மாநில செயலாளர் மின்ட் ரமேஷ் என்னிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக கூறி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் சில ஆண்டுகளுக்கு மின்ட் ரமேஷ் கோட்டூர்புரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.













Click it and Unblock the Notifications