Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 "சாமிகள்".. ஆரம்பமே பாஜக சுப்பிரமணிய சாமிதான்.. எச்.ராஜாவை பார்த்தீங்களா.. கடைசியிலதான் ஹைலைட்டே

4 சாமிகளை குறிப்பிட்டு எச் ராஜா போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்.ராஜா ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. மொத்த பேரும் திரண்டு சென்று எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு கமெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்..!

கடந்த சில தினங்களாகவே, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் அவரது மரணம் தொடர்பான விசாரணைக் கமிஷன் நடந்து கொண்டிருக்கிறது..

இது தொடர்பான செய்திகளும், ஆணையத்தில் ஓபிஎஸ் அளித்த பதில்களும் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதை மையமாக வைத்துத்தான் எச். ராஜா ட்வீட் பதிவிட்டுள்ளார்.

 சாமிகள்

சாமிகள்

அந்த ட்வீட்டில், "கேட்டதில் ரசித்தது. சுப்பிரமணிய சுவாமியாக வந்து வழக்கு தொடர்ந்தாய். குமாரசாமியாக விடுதலை செய்தாய் பழனிச்சாமியாக வந்து கமிஷன் போட்டாய் ஆறுமுக சாமியாக விசாரிக்கிராய் முருகா உண் திருவிளையாடவின் மகிமையே மகிமை" என்று பதிவிட்டுள்ளார். இதில் மொத்தம் 5 சாமிகள் இடம்பெற்றுள்ளனர்..

 சென்னாரெட்டி

சென்னாரெட்டி

சென்னாரெட்டி ஆளுநராக இருந்தபோது, ஜெயலலிதா மீது அன்று வழக்கு போட முதன்முதலில் அனுமதி கேட்டதே சுப்பிரமணிய ரெட்டிதான்.. ஆளுநர் அதற்கு அனுமதி தந்துமே, சுப்பிரமணியசாமிதான் இது தொடர்பாக முதன்முதலில் வழக்கு தொடர்ந்தார்... எப்போதுமே சேம்சைட் கோல் போடும் சு.சாமி, ஜெ.விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை.. அதனால்தான் முதல் பெயராக சுப்பிரமணியசாமியை எச்.ராஜா
கூறியுள்ளதாக தெரிகிறது.

 ஆதாரங்கள்

ஆதாரங்கள்

இதற்கு பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் கைதானாலும், வலுவான ஆதாரங்கள் இருந்தும், ஜெயலலிதாவை விடுதலை செய்தவர் கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி... எனவே இவர் 2வது பெயராக சேர்க்கப்பட்டிருக்கலாம். ஜெ.இறந்தபிறகு, அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க கோரி, ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷனை நியமித்ததே எடப்பாடி பழனிசாமிதான்..

 ஓபிஎஸ்

ஓபிஎஸ்

அதிமுக ஆட்சியில் இருந்தவரை, 5 வருடமாக ஆறுமுகசாமி இந்த வழக்கை விசாரித்து கொண்டே இருந்தார்.. ஆனால் அத்தனை காலமும் ஆஜராகாத ஓபிஎஸ், திமுக ஆட்சிக்காலத்தில்தான் ஆஜராகி உள்ளார்.. ஜெயலலிதா குறித்த ஆட்சி மற்றும் வழக்கு விசாரணைகளில் சம்பந்தப்பட்டவர்கள் அத்தனை பேரும் சாமிகள்.. அதாவது முருகரின் வேறு வேறு பெயர்களை கொண்டவர்கள்.. அதனால்தான் இப்படி சாமி ட்வீட்டை போட்டு கலாய்த்துள்ளார் எச்.ராஜா.

 ராமசாமி

ராமசாமி


இந்த ட்வீட்டுக்கு ட்விட்டர்வாசிகள் பலரும் தங்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.. "ராமசாமியாக (EV) வந்து பகுத்தறிவு ஊட்டினாய் . இதையும் சேர்த்துக்கோங்க" என்று கேட்டுக் கொண்டு வருகின்றனர். "உன்" என்பதற்கு "உண்" என்று பதிவிட்டு இருக்கிறீர்கள், எழுத்துபிழையோடு மட்டும் அல்ல கருத்து பிழையும் உங்களிடத்தில் உள்ளது.. உண் என்றால் - உணவு , சாப்பிடுவது உள்ளிட்ட எனைய பொருள்களுக்கான பதம் என்று எச்.ராஜாவுக்கு தெரிவித்துள்ளார்.

 குன்ஹா

குன்ஹா

இன்னொருவரோ, இத்தனை சாமி அம்மாவிற்கு துணையாக வந்தாலும் சுப்பிரமணிய சாமிக்கு துணையாக வந்தது குன்ஹா என்ற ஏசுநாதர் தான் என்று பதிவிட்டுள்ளார்.. மேலும் சிலரோ, இந்த டிவீட்டில் நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன.. அதை முதலில் சரி செய்துவிட்டு வரவும் என்றும் பதிவிட்டுள்ளார்.. ஆக மொத்தம் எச்.ராஜா ட்விட்டர் பரபரப்பாக காணப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+