மின்தடைக்கு அணிலை காரணம் காட்டிய செந்தில் பாலாஜிக்கு ஒரு நோபல் பரிசு பார்சல் - செல்லூர் ராஜூ
எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின்கம்பிகளில் சென்று கொண்டிருக்கின்றன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை: அணில்களில் மின்கம்பிகளின் மீது ஓடுவதால் மின்தடை ஏற்படுவதாக கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என மாஜி அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டலடித்துள்ளார்.
அதிமுக ஆட்சி காலத்தில் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டவர் செல்லூர் ராஜூ. அவரே தற்போது கிண்டலாக பேச ஆரம்பித்து விட்டார்.
Recommended Video
தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் மின்கம்பிகளில் ஓடும் அணில்களால் மின்தடை ஏற்படுவதாக கூறினார்.

அணில்களால் ஏற்படும் மின் தடை உலக அளவில் மின் வாரியங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்று கூறினார். இதை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்தார். செந்தில் பாலாஜியின் கருத்தை அதிமுகவினர் மட்டுமல்லாது சமூக வலைத்தளத்தில் பலரும் ட்ரோல் செய்தனர்.
அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, அணிலால் மின்தடை ஏற்படுவதாக கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று கிண்டலடித்தார்.
செந்தில் பாலாஜியின் கண்டுபிடிப்பால் நல்லவேளை நான் தப்பித்து விட்டேன் என்று கூறிய அவர், எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின்கம்பிகளில் சென்று கொண்டிருக்கின்றன என்றும் நையாண்டி செய்தார்.












Click it and Unblock the Notifications